பக்கம் எண் :

4

மினி (ஒளிவிடுதல்) போலவும், பாருக்குள் நல்லோர் முனேபித்தர் பல
மொழி பகர்ந்திடும் செயல் போலவும் - உலகில் நல்லவர்கன் பேசுவதைப்
போலப் பித்தர்கள் பலசொற்கள் பிதற்றுவது போலவும், பாரில் பச்சை மயில்
ஆடுதற்கு இணையென்று வான்கோழி ஆடுதல் போலவும் - உலகத்தில்
அழகிய பசுமையான மயில் ஆடுவதற்கு ஒப்பாக வான்கோழி ஆடுவது
போலவும், பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகரென்று போது வாய்க்கால்
போலவும் - பெருகிச் செல்லும் அழகிய காவேரி யாற்றுக்குச் சமமாகச்
செல்லும் சிறுவாய்க்கால் போலவும், புகல்சிப்பி முத்துக்கு நிகராப் பளிங்கைப்
பொருந்த வைத்தது போலவும் - புகழ்ந்து சொல்லப்படும் சிப்பியின்
முத்துக்குச் சரியாகப் பளிங்கைப் பொருத்துவது போலவும், வாரிக்குமுன்
வாவி பெருகல் போலவும் - கடலுக்கு நிகராகப் பொய்கை நிறைந்து
காட்டுதல் போலவும், இன்சொல் வாணர்முன் - இனிய மொழிகளுடைய
கவிஞருக்குச் சமமாக (எண்ணி), புல்லை வால குமரேசர் மேல் உகந்து
சதகம் புகன்றனன் - திருப்புல்வயலில் எழுந்தருளிய குமரக் கடவுளைத்
தலைவராக வைத்து விருப்பத்துடன் சதகம் என்னும் நூலை எழுதினேன்;
மனம் பொறுத்து அருள் புரிக - (கவிவாணர்கள்) முழுமனத்துடன்
பொறுத்துக்கொண்டு (இச்சதகத்தை) ஏற்று அருள்வாராக.

     (கருத்து) ‘என் சொற்கள் புலவர் சொற்களைப் போல இனிமையாக
இல்லாவிடினும் பொறுத்து, இந்த நூலை ஏற்றுக் கொள்க' என்பதாம்.

     (அருஞ்சொற்கள்) மாரி - மழை. மருவுதல் - பொருந்துதல். பார் -
உலகம், நிகர் ஆ - சமம் ஆக. வாரி - கடல். வாவி - குளம். வாழ்நர்
என்பது வாணர் என ஆயிற்று. உகப்பு - விருப்பம். சிப்பியிலிருந்து முத்துப்
பிறக்கும்.

     (வடசொற்கள்) சந்திரன் - திங்கள். பித்தர் - அறிவு மயங்கியவர்.