பக்கம் எண் :

68

       40. மக்களில் விலங்குகள்

தான்பிடித் ததுபிடிப் பென்றுமே லவர்புத்தி
     தள்ளிச்செய் வோர்குரங்கு
சபையிற் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்
     தாம்பயன் இலாதமரமாம்

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
     வெறியர்குரை ஞமலியாவர்
மிகநாடி வருவோர் முகம்பார்த்தி டாலோபர்
     மேன்மையில் லாதகழுதை

சோம்பலொடு பெரியோர் சபைக்குள் படுத்திடும்
     தூங்கலே சண்டிக்கடா
சூதுடன் அடுத்தோர்க் கிடுக்கணே செய்திடும்
     துட்டனே கொட்டுதேளாம்

மாம்பழந் தனைவேண்டி அந்நாளில் ஈசனை
     வலமாக வந்தமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மாம்பழந்தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த
முருகா - முற்காலத்தில் மாம்பழத்தை விரும்பிச் சிவபெருமானை வலமாக
வந்த முருகனே! மயிலேறி..........குமரேசனே!-, தான்பிடித்தது பிடிப்பு என்று
மேலவர் புத்தி தள்ளிச்செய்வோர் குரங்கு - தான் கொண்டதே
கொள்கையெனக் கொண்டு பெரியோர் அறிவுரையை நீக்கிச் செய்வோர்
குரங்காவர் ; சபையில் குறிப்பறிய மாட்டாமல் நின்றவர்தாம் பயன் இலாத
மரமாம் - அவையிலிருந்து ஒருவருடைய குறிப்பை அறியாமல் நிற்பவர்கள்
பயனற்ற மரமாவர்; வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்குமொரு
வெறியர் குறை ஞமலி ஆவர் - வேண்டுமென்று பிடிவாதமாகச்
செல்வாக்கற்றவர்களை எதிர்ப்பாக்கிக் கொண்டு திரியும் வெறியர்
குரைக்கும் நாயாவார்; மிகநாடி