43.
நல்லினஞ் சேர்தல்
சந்தன
விருட்சத்தை அண்டிநிற் கின்றபல
தருவும்அவ் வாசனைதரும்
தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும்
சாயல்பொன் மயமேதரும்
பந்தம்மிகு
பாலுடன்வ ளாவியத ணீரெலாம்
பால்போல் நிறங்கொடுக்கும்
படிகமணி கட்குளே நிற்கின்ற வடமுமப்
படியே குணங்கொடுக்கும்
அந்தமிகு
மரகதக் கல்லைத் தரித்திடில்
அடுத்ததும் பசுமையாகும்
ஆனபெரி யோர்களொடு சகவாசம் அதுசெயின்
அவர்கள் குணம் வருமென்பர்காண்
மந்தர
நெடுங்கிரியின் முன்கடல் கடைந்தஅரி
மருகமெய்ஞ் ஞானமுருகா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|