44.
ஊழின் பெருவலி
அன்றுமுடி
சூடுவ திருக்கரகு ராமன்முன்
அருங்கா டடைந்ததென்ன
அண்டரெல்லாம் அமிர்தம் உண்டிடப் பரமனுக்
காலம் லபித்ததென்ன
வென்றிவரு
தேவர்சிறை மீட்டநீ களவில்வே
டிச்சியை சேர்ந்ததென்ன
மேதினி படைக்கும் அயனுக்கொரு சிரம்போகி
வெஞ்சிறையில் உற்றதென்ன
என்றும்ஒரு
பொய்சொலா மன்னவன் விலைபோன
தென்னகாண் வல்லமையினால்
எண்ணத்தி னால்ஒன்றும் வாராது பரமசிவன்
எத்தனப் படிமுடியுமாம்
மன்று
தனில் நடனமிடு கங்கா தரன்பெற்ற
வரபுத்ர வடிவேலவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|