பக்கம் எண் :

76

    45. பெரியோர் சொற்படி நடந்தவர்

தந்தைதாய் வாக்யபரி பாலனம் செய்தவன்
     தசரத குமாரராமன்
தமையனருள் வாக்கியபரி பாலனம் செய்தோர்கள்
     தருமனுக் கிளை யநால்வர்

சிந்தையில் உணர்ந்துகுரு வாக்யபரி பாலனம்
     செய்தவன் அரிச்சந்திரன்
தேகியென் றோர்க்கில்லை எனாவாக்ய பாலனம்
     செய்தவன் தான கன்னன்

நிந்தை தவிர் வாக்யபரி பாலனம் செய்தவன்
     நீள்பலம் மிகுந்த அனுமான்
நிறைவுடன் பத்தாவின் வாக்யபரி பாலனம்
     நிலத்தினில் நளாயினிசெய்தாள்

மந்தைவழி கோயில்குள மும்குலவு தும்பிமுகன்
     மகிழ்தர உகந்ததுணைவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.

     (இ-ள்.) மந்தைவழி கோயில் குளமும் குலவு தும்பிமுகன் மகிழ்தர
உகந்த துணைவா - மந்தையிலும், வழியிலும், கோயிலிலும், குளக்கரையிலும்
திருக்கோயில் கொண்ட யானைமுகக்கடவுள் மகிழும்படி விரும்பிய
தம்பியே!, மயிலேறி........குமரேசனே! -, தந்தைதாய் வாக்கியபரிபாலனம்
செய்தவன் தசர தகுமார ராமன் - பெற்றோர் சொல்லைக்காத்து நடந்தவன்
தசரதன் மகனான இராமன்; தமையன் அருள் வாக்கியபரிபாலனம்
செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் - தமையன் கூறிய சொல்லைக்
காத்தவர் தருமபுத்திரனுக்குத் தம்பியரான நால்வர்கள்; சிந்தையில் உணர்ந்து
குருவாக்கிய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் - உள்ளத்திலே
ஆராய்ந்தறிந்து ஆசிரியன் சொற்படி நடந்தவன் அரிச்சந்திரன்; தேகி
என்றோர்க்கு இல்லை