49.
பயன்தரும்
பருவத்தி
லேபெற்ற சேயும் புரட்டாசி
பாதிசம் பாநடுகையும்
பலமினிய ஆடிதனில் ஆனைவால் போலவே
பயிர்கொண்டு வருகரும்பும்
கருணையொடு
மிக்கநா ணயமுளோர் கையினில்
கடன்இட்டு வைத்தமுதலும்
காலமது நேரில் தனக்குறுதி யாகமுன்
கற்றுணர்ந் திடுகல்வியும்
விருதரச
ரைக்கண்டு பழகிய சிநேகமும்
விவேகிகட் குபகாரமும்
வீண் அல்ல இவையெலாம் கைப்பலன் தாகஅபி
விர்த்தியாய் வருமென்பர்காண்
மருவுலா
வியநீப மாலையும் தண் தரள
மாலையும் புனை மார்பனே
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|