வல்லான கொங்கைமட
மாதுதெய் வானைகுற
வள்ளிபங் காளநேயா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. |
(இ-ள்.)
வல்ஆன்
கொங்கை மடமாது தெய்வானை குறவள்ளி
பங்காள நேயா - சூதாடு கருவிபோன்ற கொங்கைகளையுடைய
இளமங்கையான தெய்வயானையும் வேடர் குல வள்ளியும் விரும்பும்
பங்காளனான காதலனே!, மயிலேறி........குமரேசனே!-, கல்லாது
புத்தகந்தனில் எழுதி வீட்டினில் கட்டிவைத்திடு வித்தையும் - கற்காமலே
ஏட்டில் வரைந்து வீட்டிலே கட்டிவைத்த கல்வியும், காலங்களுக்கு
உதவவேண்டுமென்று அந்நியன் கையில் கொடுத்த பொருளும் -
விரும்பியபோது பயனுற வேண்டுமென்று அயலானிடம் கொடுத்த பணமும்,
இல்லாளை நீங்கியே பிறர் பாரிசதம் என்று இருக்கின்ற குடிவாழ்க்கையும் -
தன் மனைவியை விட்டுவிட்டு மற்றவன் மனைவியை நிலையென்று
நினைத்துவாழும் வாழ்க்கையும், ஏறுமாறாகவே தேசாந்தரம் போயிருக்கின்ற
பிள்ளை வாழ்வும் - மாறுபட்ட மனத்துடன் வெளிநாட்டிற்குச்
சென்றிருக்கின்ற பிள்ளையின் வாழ்க்கையும், சொல்லானது ஒன்றும் அவர்
மனமானது ஒன்றும் ஆ சொல்லும் வஞ்சகர் நேசமும் - சொல்வதொன்றும்
நினைப்பது ஒன்றுமாகப் பேசும் பொய்யர் நட்பும், சுகியமாய் உண்டு என்று
இருப்பதெல்லாம் துரித தருணத்தில் உதவாது - நன்மையாகக் கிடைக்கும்
என்று இருக்கும் இவைபோன்ற யாவும் இடுக்கணுற்ற காலத்து விரைவாகப்
பயன்படா.
(விளக்கவுரை)
வல்-சூதாடு
கருவி. பாரி-மனைவி. தேச - அந்தரம்:
தேசாந்தரம்: தீர்க்கசந்தி; வெளிநாடு. அந்தரம் - முடிவு. சுகியம் (வட) -
நன்மை. காண் : முன்னிலை அசை.
(கருத்து)
இங்குக்
கூறியவை வேண்டியபோது பயன்படா.
|