பக்கம் எண் :

90

கணவருடை அருமையைக் கற்பான மாதறிவள்
     கணிகையா னவள் அறிவளோ
கருதும் ‘ஒரு சந்தி'யின் பாண்டம்என் பதைவரும்
     களவான நாயறியுமோ

குணமான கிளியருமை தனைவளர்த் தவரறிவர்
     கொடியபூ னையும்அறியுமோ
குலவுபெரி யோரருமை நல்லோர்க ளேயறிவர்
     கொடுமூடர் தாம்அறிவரோ

மணவாளன் நீயென்று குறவள்ளி பின்தொடர
     வனமூடு தழுவும்அழகா
மயிலேறி விளையாடு குகனே!புல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே!

     (இ-ள்.) மணவாளன் நீ என்று குறவள்ளி பின் தொடர வனமூடு
தழுவும் அழகா - நீயே கணவன் என்று வேடர்குல வள்ளியம்மை
பின்பற்றிவரச்சென்று காட்டிலே அவளைத் தழுவும் அழகனே!,
மயிலேறி..........குமரேசனே!-, மணம்மாலை அருமையைப் புனைபவர்களே
அறிவர் மட்டிக் குரங்கு அறியுமோ - மணமுடைய மாலையின் சிறப்பை
அதனை அணிகின்றவர்கள் அறிவார்களேயன்றி அறிவற்ற குரங்கு
அறியுமோ?, மக்களுடைய அருமையைப் பெற்றவர்களே அன்றி மலடிதான்
அறிவது உண்டோ?-குழந்தைகளின் சிறப்பைப் பெற்ற அன்னையர்கள்
அறிவார்களேயல்லாமல் மலடி அறிவாளோ?, கணவருடைய அருமையைக்
கற்புஆன மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ - கணவருடைய
சிறப்பைக் கற்புடைய மனைவி அறிவாள்; பொதுமகள் அறிவாளோ?, கருதும்
ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவுஆன நாய் அறியுமோ -
நினைவிலே கொள்ளத்தக்க நோன்பிற்குச் சமைக்கும் பாண்டம் என்பதைத்
திருடவரும் நாய் அறியுமோ? குணமான கிளி அருமைதனை வளர்த்தவர்
அறிவர் கொடிய பூனையும் அறியுமோ - பண்புடைய கிளியின் சிறப்பை