55.
தீச்சார்பு
மடுவினிற்
கஞ்சமலர் உண்டொருவர் அணுகாமல்
வன்முதலை அங்கிருக்கும்
மலையினில் தேன்உண்டு சென்றொருவர் கிட்டாமல்
மருவிஅதில் வண்டிருக்கும்
நெடுமைதிகழ்
தாழைமலர் உண்டொருவர் அணுகாமல்
நீங்காத முள்ளிருக்கும்
நீடுபல சந்தன விருட்சம்உண் டணுகாது
நீளரவு சூழ்ந்திருக்கும்
குடிமல்கி
வாழ்கின்ற வீட்டினிற் செல்லாது
குரைநாய்கள் அங்கிருக்கும்
கொடுக்கும் தியாகியுண் டிடையூறு பேசும்
கொடும்பாவி உண்டுகண்டாய்
வடுவையும்
கடுவையும் பொருவுமிரு கண்ணிகுற
வள்ளிக் குகந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே.
|