பக்கம் எண் :

96

செல்வமிகு கணவனே தெய்வமென் றனுதினம்
     சிந்தைசெய் பவள்மனைவியாம்
சிநேகிதன் போலவே அன்புவைத் துண்மைமொழி
     செப்புமவ னேசோதரன்

தொல்வளம் மிகுந்தநூல் கரைதெரிந் துறுதிமொழி
     சொல்லும்அவ னேகுரவன்ஆம்
சொன்னநெறி தவறாமல் வழிபாடு செய்துவரு
     துய்யனே இனியசீடன்

வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரி யுடன்குறவர்
     வஞ்சியை மணந்தகணவா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
     மலைமேவு குமரேசனே.
 

     (இ-ள்.) வல்விரகம் மிஞ்சுசுர குஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த
கணவா - மிகுந்த காதலையுண்டாக்கும் தெய்வயானையுடன் குறவர்
பெண்ணையும் மணம்புரிந்த கணவனே!, மயிலேறி....... குமரேசனே! -,
சபையின் மேல்வட்டம்ஆ கல்வியொடு கனம்உறக் காணவைப்போன்
பிதாவாம் - பேரவையிலே உயர்ந்த நிலையிலே கல்வியுஞ் சிறப்பும் பொருந்த
இருக்கவைப்பது தந்தையின் கடமை; கற்று உணர்ந்தே தனது புகழால்
பிதாவைப் பிரகாசம் செய்வோன் புத்திரன் - கலைகளைக் கற்றறிந்து தன்
புகழினாலே தந்தைக்குப் பெயர் தேடித்தருவது மகன் கடமை; செல்வம்மிகு
கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தை செய்பவள் மனைவிஆம் -
செல்வத்திற் சிறந்த கணவனே தெய்வம் என்று எப்போதும் மனத்திற்
கொண்டிருப்பது மனைவியின் கடமை; சிநேகிதன் போலவே அன்பு வைத்து
உண்மைமொழி செப்புமவனே சோதரன் - நண்பனைப்போல அன்புகொண்டு
உண்மையாகப் பேசுவது உடன்பிறந்தோன் கடமை; தொல்வளம் மிகுந்த நூல்
கரைதெரிந்து உறுதிமொழி சொல்லுமவனே குரவன்ஆம் - பழைமையான
பொருள்வளம் செறிந்த நூல்களின் கரை