(கு
- ரை) அவிநாசித் தலத்தில் சுந்தரர் பதிகம் பாடி, முதலை
விழுங்கிய பிள்ளையை மீட்ட செய்தியினைத் தேவாரப் பதிகத்தினுள்ளும்
காணலாம்.
காசி
தீர்த்தம் - அவிநாசி
(18)
|
விரிபுன
லாகிய கங்காநதி விசுவேசர் சொல்லாற்
புரையுறு பூமிக்குள் வந்தா லயத்தொரு பூஞ்சுனையாய்த்
திருவவி நாசியி லீசற்குக் காசியிற் றீர்த்தமென
மருவபி டேகத்துக் கானது வுங் கொங்குமண்டலமே. |
சுந்தரர்
(19)
|
கோவாய்க்
கருணைசெய் வாரணவாசி கொழுகொம்புதந்
தாவாய்க் கருணை தனைவலப் பாகந் தரித்துநின்று
மூவாண்டு சென்ற முதலைதன் வாய்ப்பிள்ளை முன்னழைத்து
வாவாவென் றோதிய சுந்தரர் வாழ்கொங்குமண்டலமே. |
(கு
- ரை) காண்க கார்மேகக் கவிஞரின் பாடல் எண் : 16
கூப்பிடு
பிள்ளையார் - திருமுருகன்பூண்டி
(20)
|
கருவா
முதலையின் வாய்ப்பிள்ளை மீட்டுக் கருணையுடன்
அருகூர் திருவவி நாசிப்பெம்மானுக் கறிக்கைசெய
முருகீசர் சுந்தரர் கையிற்பறித்த முறைகொண்டெதிர்
வருகூப் பிடுவிக்கி னேசுரர் வாழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) காண்க கார்மேகக் கவிஞரின் பாடல் எண் : 15
நண்ணாவூர்
- இலந்தை மரம்
(21)
|
அருந்தவ
மாமுனி வோர்களுந் தேவரு மன்புடனே
நிரந்தரமாகத் தொழுமால யத்துக்கு நித்தநித்தம்
திருந்தும் பரம சிவன்பூச னைக்கொரு தென்னிலந்தை
மரங்கனி யீவதும் நண்ணாவூர் சூழ்கொங்கு மண்டலமே. |
(கு
- ரை) காண்க
கார்மேகக் கவிஞரின் பாடல் எண் : 14
|