மல்லரை
வீமன் செயித்தது, கீசகன் வதை முதலியவற்றைப் பாரதம்
நோக்கியறிந்து கொள்க.
கீசகன்
கதை
(33)
|
விண்ணவர்
போற்றிய லாட புரத்தைவர் வேற்றுருவாய்க்
கண்ணிய வேடங்கொண் டங்கே யிருக்கின்ற காலத்திலே
கிண்ண முலையைத் தழுவவென் றேவந்த கீசகனை
வண்ண மகள்செகுத் தாளது வுங்கொங்கு மண்டலமே. |
வீமன்
மல்லரைத் தொங்கச் செய்தது
(34)
|
அவ்வா
னவர்பணி வீமன் விலாட புரமதனில்
ஒவ்வாக் கொடுந்துரி யோதனன் விட்ட வுயர்மல்லரைச்
செவ்வால் மரத்தை வளைத்தினை கொய்யெனச் சொல்லிவிட்டு
வவ்வா லெனத்தொங்கச் செய்தது வுங்கொங்கு மண்டலமே. |
அறுந்தகனி
பொருந்தினது - புகழூர் மலை
(35)
|
நாவலந்தீவிற்
றுரியோ தனனைவர் நாடுவிட்டுப்
பூவனந் தன்னில் வந்துதித் தோர்புக ழார்ந்தமலை
தேவதி தேவன் றிரோபதை காந்தன் சிவனமுத
மாவின் கனியைப் பொருந்தவும் வாழ்கொங்கு மண்டலமே |
காந்த
மலை
(36)
|
சொற்றிறம்
பாமற் றுரோபதை யைவருந் துய்யவன
முற்றது சொல்லவு மற்றது தான்பொருந்து துங்கனியைச்
சித்திர காந்த முனியீசர் பூசை சிறந்தகனி
வைத்தனன் காந்த மலையோங்கி வாழ்கொங்கு மண்டலமே.
|
|