பக்கம் எண் :

211

                    2. ஏழூர் நாடு

5.















ஏழுரினோடுநாட் டாமங்கை கலியாணி யெழினவனி
                                முசிரி புத்தூர்
     இணையில் தாழம்பாடி தும்பைநகர் மானத்தி
                           இளநகரி மாறப்பனூர்
தாழா மரூர்ப்பட்டி முதலையின் பட்டியொடு தனிநல்லி
                                  பாளயமுடன்
     தங்குகொண் டப்பனூர் சிவியான னகரிமுத்
                        தக்காளூர் மின்னாம்பளி
வாழைமிகு சேந்தமங் கலமோர் துத்திக்குளம் வண்மை
                                காளப்பனூரும்
     மாழைவெட் டுக்காடு வேளைகரு தானியும்
                           மாபுடங்கந் திருமலை
காழிகண் ணூற்பட்டி யோடுடுப் பங்காரை கவின்வலங்
                                   காணியகரம்
     கருது முத்தப்பனூர் முப்பத்திரண்டிவூர் காணுமே
                                  ழூ
ர்நா டரோ.

ஏழூர் மரூர்ப்பட்டி வேளுக்குறிச்சி
நாட்டாமங்கலம் முதலைப்பட்டி கருதானி
கலியாணி நல்லிபாளயம் புடங்கம்
நவனி கொண்டப்பனூர் திருமலைப்பட்டி
முசிரி சிவியாம்பாளயம் கண்ணூறுப்பட்டி
புத்தூர் முத்தக்காள்பட்டி கலங்காணி
தாழம்பாடி மின்னாம்பள்ளி உடுப்பம்
தும்பங்குறிச்சி சேந்தமங்கலம் காரைக்குறிச்சி
மானத்தி துத்திக்குளம் அகரம்
இளநகரி காளப்பநாயக்கன்பட்டி முத்தப்பனூர்
மாறப்பனூர் வெட்டுக்காடு  

                                        ஆக ஊர்கள் - 32  

     ஏழூர்நாடு - வாளவந்தி நாடு - விமலை நாடு இவைகட்கு
எல்லையாக இருப்பது நாமக்கல். இதற்கு "அதியேந்திர விஷ்ணுக்ரஹம்"
என்று பெயர். அதியனாலமைக்கப்பெற்றதால் இப்பெயராயிற்று. இது ஏழூர்
நாட்டில் மலைக்கோட்டையுள்ள பெருநகரமாதலின் ஊர்த்தொகையுட்
சேரவில்லை. 'வடகொங்கு' என்ற சாசனமிருக்கிறது.