|
வீரமிகு
சோழபாண் டியுநடுவ னேரியு மேவுசித்
தூருதேவூர்
மிக்கபூ
லாம்பட்டி பக்கநா டதிவலிமை
மிஞ்சுறு
பெரும்பாலையாம்
பேரிலகு மிருபத்தா றூரோடு மேன்மைமொழி
பெற்றநதி
களும்வரைகளும்
பேசரிய
சிற்பமமர் கோயிலுங் கட்டிபுகழ்
பெருகுபூ
வாணியநாடே. |
தாரமங்கலம்
|
ஓமலூர்
|
கொங்கணாபுரம்
|
கச்சுளி
|
கருப்பூர்
|
சோழபாண்டி
|
காடையாம்பேட்டை
|
நங்கைவல்லி
|
நடுவனேரி
|
வனவாசி
|
வெள்ளாறு |
சித்தூர்
|
சின்னப்பன்பட்டி
|
மேச்சேரி
|
தேவூர்
|
தோப்பூர்
|
முப்பை-சமுத்திரம்
|
பூலாம்பட்டி
|
கோனேரிப்பட்டி
|
அரசறாமணி
|
பக்கநாடு
|
இடைப்பாடி |
அமரகுந்தி |
பெரும்பாலை.
|
துளசம்பட்டி
|
சூரப்பள்ளி
|
|
-
ஆக ஊர்கள் - 26
பூவாணிய
நாட்டின் வடக்கு எல்லையான பெரும்பாலையே
அதிகமானது இராஜமாநகரமான தடூர் (தருமபுரி) நாட்டுக்குத்
தென்எல்லை ஆம்.
மற்றொருவகை
வெண்பா
18.
|
*
|
நங்கைவல்லி
நாடு நணியபக்க நாடுடனே
தங்குபெரும் பாலையெனச் சார்நாடுந் - தங்குபுகழ்ப்
பூவா ணியநாடுட் பூத்தனவென் றோதினார்
பாவாண ருள்ளம் பரிந்து. |
பூவாணிய
நாட்டினுள் நங்கைவல்லி நாடு (இதை வஞ்சிநாடு என
வழங்கினதுண்டு) பக்கநாடு - (இதை வெள்ளாறு நாடு என்பாருமுளர்)
பெரும்பாலைநாடு எனச்சில ஊர்கள் சேர்ந்ததாய்ச் சிறுசிறுநாடு ஆகப்
பிளவு கொண்டும் வழங்கப்பட்டுள்ளது.
|