பக்கம் எண் :

225

விரிவுமிகு நாமக்கல் கோடங்கிபட்டியும் வெற்றி
                          சீரங்க னல்லூர்
     வீறானதிப்பிரமா தேவி யெருமைப் பட்டி
                     வீரசோழரசை நத்தம்
திருவுலவு ரட்டையும் பட்டிமேட் டுப்பட்டி
                   சீர்கொள்ளு மருவூடன்
     செய்ய புத்தூரரலங் காநத்த முஞ்சேர்ந்து
                    செய்தூசூர் நாடுதானே.

தூசியூர்1 பரளி திப்பிரமாதேவி
குவளம்பட்டி பொன்னேரி எருமைப்பட்டி
தோகைநத்தம் புதுப்பட்டி அரசநத்தம்
சிதம்பரப்பட்டி புதுக்கோட்டை ரட்டையம்பட்டி
முத்தக்காபட்டி பாலப்பட்டி மேட்டுப்பட்டி
பழயபாளயம் நாமக்கல் அரூர்
வேப்ப நத்தம் கோடங்கிபட்டி புத்தூர்
வசந்தராயன்கோயில் நல்லூர் அலங்காநத்தம்
லத்திவாடி    

                                              ஆக ஊர்கள் - 25

                 2. விமலை நாடு

27.















கருணையயி லூருடன் விருதுகாட் டுப்புதூர்
                         கனகடாரம் உன்னியூர்
     காமதரு வாஞ் சிலாப் பிள்ளைபுத் தூர்நத்தங்
                           கமழ்நாக யநல்லூரும்
அருமைதனில் மேலாம்பி டாரமங் கலமுட
                         னானவொரு வந்தூரதும்
     அருமைமெய்க் காநாய்க்கன் பட்டிகாட் டுப்பட்டி
                        அமர்சேர்வை காரனூரும்
வருணமழை பொழிகளத் தூர்முருங் கைப்பதியு
                       வண்மையாண் டாபுரமுடன்
     வரிசைமேட் டுப்பட்டி தமிழ்வலைய பட்டியும்
                         வானோங்கு புத்தூருமே
திருகொள்வேந் தன்பட்டி அரசலூர் முதலபல
                        செல்வமிகு நகரமெல்லாம்
     சேர்ந்துபல வளமையுட னோங்குமலை நதிபரவு
                           சீர்விமலை நாடுதானே.


     1 இந்தத் தூசியூர்த் திருக்கற்றளியுடைய பரமேசுரர் கோயில்
       சம்பந்தமான ஒரு தாம்பர சாசனத்தால், கோ ராஜகேசரி வர்மன்
       ஈழத்தின்மேற் படையெடுத்தமை விளங்குகிறது.