பக்கம் எண் :

231

செவ்வாய்ப்பேட்டை மிசினாம்பட்டி  
மல்லூர் குமாரசாமிப்பட்டி காரிப்பட்டி
குமாரபாளயம் செம்மாண்டபட்டி வீராணம்
அலைவாய்ப்பட்டி இளம்பள்ளி அயோத்திப் பட்டணம்

                                                                                                              - ஆக ஊர்கள் - 20

     சேலத்தை அடுத்த சேர்வராயன் மலைமேல்

முட்டநாடு மோகநாடு சேலம்நாடு

என மூன்று நாடுகளுள்ளன.

     மலைமேல் சேலநாடு என்னும் பகுதியில் ஏற்காடு இருக்கிறது. அங்கு
ஐரோப்பியர் பங்களாக்களும் கச்சேரிகளுமிருக்கின்றன.

               காஞ்சிக்கோயில் நாடு

35.















பன்னுதமி ழின்பஞ் சிறந்த தென் காஞ்சிநகர்
                      பண்பான கூடலூரும்
     பார்புகழ்ந் தருள்கவந் தப்பாடி யுடன்திக
                      பழனமுள பாரியூரும்
பொன்னினியல் வாழும் பெருந்தலைசை யூருடன்
                பொருவில் புலியூர் முடச்சூர்
     புங்கமிகு பங்கயமி லங்கியக லிங்கயம்
                     புகழேவிளங்கி நாளும்
மன்னுமணி மேடைதிகழ் மின்னிய வழுக்கொளி
                     வளமிகு குளப்பலூரும்
     வானவர் விளங்குதா ளூன்றியும் பூஞ்சோலை
                       மருவுபுக ழயிலூருடன்
கன்னிபங் காளர்திரு நீலகண்டேசுரர் கவுரியுமை
                          கருணை யதனால்
     காஞ்சிவள நாட்டவர்கள் நீடூழி காலமுங்
                    காசினியின் வாழ்கமாதோ.

1 காஞ்சிக் கோயில் பெரும்புலியூர் தாளூன்றி
2 கூகலூர் - கூவலூர் முடச்சூர் விக்கிரமசோழபுரம்


     1 காஞ்சிக்கோயில் நாட்டு விஷயங்கள், கோபிசெட்டிபாளயம்
       ஸ்ரீமான் முத்துவேலப்ப கவுண்டரவர்கள் உபகரித்தனர்.

     2 கூவலூர் சிவாலய சாசனத்தில் காஞ்சிக் கோயில் நாடு,
        நாட்டுக்காமிண்டன்.