கம்பநாத சாமியவர்கள்
அருளிச்செய்த
கொங்கு மண்டல சதகம்
(முடிசூட்டியது)
1
|
கொங்கேழ் நதியுஞ் சிவகிரி மேவு குவலயமுங் கங்கா நதியும் புகழ்பெறு வாசமுங் கற்புநிலை சிங்கா சனமுந் தசரதரா சன்றன் செல்வருக்கு மங்காக் கனக முடிசூட்டி வாழ்கொங்கு மண்டலமே |
(பி.ம்) 'நிதியும்' 'தசரதராமன்', 'முடிசூட்டுவார்'
(இந்திரனுக்கு அமுதளித்தது)
2
|
தேவா வமுர்தத் துருவாசர் சாபந் தேவேந்திரர்க்குப் போபோ வெனவைந் தருங்கடற் புக்கலும் பொன்னுலகோர் கோவா னிதியொடு கங்கை குலமுங் கொடுத்தழைத்து வாவா வெனச்சொல்லி அமுதூட்டி வாழ்கொங்குமண்டலமே |
(பி. ம்) 'வமுதத் துருவாசர்சாபந்', 'வமுதந்துருவாசர்', வைந்தருக்கடல்,
(விருந்து)
3
|
புரந்தர ராசன் செய்தேவா வமுர்தம் புனலொளிந்து மிருங்கலி காலமக் காலத்தி லேயிவற் கேற்குமென்று விருந்தை யளித்து நற்றேவா வமுர்தமும் விண்ணவர்கள் வரம்பெறு நேர்கங்கை வங்கிசம் வாழ்கொங்கு மண்டலமே |
(பி. ம்) 'தேவாவமுதம்,' 'புனலொழிந்து',
(நச்சுப் பொய்கை)
4
|
அர்ச்சுனன் தர்மன் சகாதேவன் வீம னகுலனைவர் உச்சித கான வனந்தனி லோட வுயர்ந்த பொய்கை நச்சது சேர வுயர்தர்ம ராசரு மரங்கமலை வச்சுகி யார மனைவோரும் வாழ்கொங்கு மண்டலமே |
(பி. ம்) 'அருச்சுனன் தன்மன்,' 'உச்சிதகானஞ் சுரந்தனில்',
|