5
|
வில்லா லெறிந்து திருவானி நாதர் விமலர்பதங் கல்லாலெறிந்து மலர்தெரிந்தோர் கங்கை வங்கிசமுங் சொல்லாலெறிந்துமுன்வாளாற் கழுத்தைத் துணித்துவைத்தும் வில்லா லெறிபவர் காண்பது காண்கொங்கு மண்டலமே |
(பி. ம்) 'திருவழிநாதர்,' 'விமலர்பக்கம்,' 'கொல்லாலெறிந்து,' 'மின்வாளால்,' 'வல்லாலெறிந்தவர்,' 'திருவாணி' 'வங்கிசத்தோர்,' 'வைத்து'
(நீலி பழிக்கஞ்சியது)
6
|
கன்னிகை யம்பிகை காமாட்சி தேவிதன் கச்சிதன்னில் பன்னிய பாடல் வணிகருக் காகப் பழசையிலே மின்னிய நீலி பழிக்காக மேன்மையே ளாளர்மிக்க வன்னியில் மூழ்கிய காராளர் வாழ்கொங்கு மண்டலமே |
(பி..ம்) காமாட்சி யம்மைதன், பழகியிலே
7
|
தாவினில் கூடிய மூவரி லரசர் சபைதனிலே சோபன மங்கையும் வந்துதித் தாள்சுய மம்மையப்பர் சேவினி லேறி நல்லவர்க் காக்கங்கை சிறந்துவளர் வாழ்வது கொண்டநற் காராளர் வாழ்கொங்கு மண்டலமே. |
(பி..ம்) மூவரில்ராசர், 'நலவாகக்கங்கை' 'சோவனமங்கை'
8
|
பாணன் பிணமுந் தனையே சுமந்திந்தப் பாருலகில் காணென் பிணமென்று கார்த்தவன் காண்கற்ப காலத்திலே ஊணன்றன் சோற்றைத் தேவா வமுர்தத்தை யூட்டுமென்று வாணன் கவியைத் தவிர்த்தாள்வ துங்கொங்கு மண்டலமே |
(த ம்) பாணன் பிணங்கடனையே, காணன் பிணமென்று, யூணன்தன் சோற்றை, தவித்தான்வது, தேவாவ முதத்தை
(கீர்த்தி)
9
|
தண்டமிழ் பாடி வரும்புல வோர்சமு சியந்தீர உண்டது கூழை யொழித்தனன் காண் துரும்போட்டிநின்று கண்டனன் சொன்னது மெய்யென்று கூழைக் கரத்தில்வைத்து மண்டலங் கீர்த்தி தனைப்படைத் தார்கொங்கு மண்டலமே |
(பி. ம்) சமுசயந்தீர்த், துரும் போட்டிநின்றான், கண்டனன் சோழனுமே யென்று, கீர்த்தி புகழ் படைத்தார்.
|