|
பூதம் ஊட்டுவதாய்ச் சிறந்து
அமைந்திருத்தலை ஓர்க. இதனால் அந்நாடு
தாய்மையன்பு சான்றது என இறைச்சி, உள்ளுறையாகவும்
கொள்க. (145)
சேடி, தமயந்திக்குக் கலிங்கநாட்டு
மன்னனைக் காட்டல்
153. வெள்வாளைக் காணைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப்
- புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.
(இ - ள்.) தண் தெரியல்
தேர்வேந்தன் தான் - குறிர்ச்சியுள்ள
மலர்மாலையணிந்த தேரூரும் வேந்தனாகிய இவன்,
மேதிக் குலம் - எருமைக் கூட்டங்கள், வெள்வாளைக்
காளைமீன் எழுப்ப-வெண்ணிறம் பொருந்திய வாளை
இளமீன்களை (விழுந்து) கிளப்புவதனால் (அவைகள்),
கள்வார்ந்த தாமரையின் காடு உழக்கி - தேன்
ஒழுகிய தாமரை மலர்களையெல்லாம் கிண்டி, புள்ளோடு
வண்டு இரிய செல்லும் - பறவைகளுடன் வண்டுகளும்
அஞ்சியோடும்படி பாய்ந்தோடுகின்ற, மணிநீர்க்
கலிங்கர்கோன்-வற்றாத நீர்வளமுள்ள
கலிங்கநாட்டில் வாழ்வார்க்கு வேந்தனாவான்.
(க - து.) ‘(ஏ கொடியிடையாய் !) இவ்
வேந்தன், எருமை இனங்கள் நீரில் விழுந்து
வாளைமீன்களைக் கிளப்ப, அவைகள் தாமரைக்காட்டை
உழக்கி, வண்டுகளும் பறவைகளும் அஞ்சியோடும்படி
பாய்ந்து செல்கின்ற கலிங்க நாட்டுக்கும்
அரசனாவான்’ என்பதாம்.
(வி - ரை.) வெள்வாளை -
வெள்ளைநிறம் பொருந்திய வாளைமீன். காளைமீன் -
காளைபோன்ற துடிப்புள்ள மீன் என உவமத்
தொகையாகக் கொள்ளலுமாம். எழுப்ப : காரணப்
பொருட்டாய் வந்த செய்வெனெச்சம். தாமரையின்
காடு: தாமரை மிகுதி, அஃது இங்கே தாமரை மலரை
உணர்த்திற்று; முதலாகு பெயர். புள் - பறவை. வண்டு -
வண்டினங்கள். தாமரை மலரில் வாழ்வன பறவைகளும்
வண்டினமும் ஆகலான், வாளை மீன் உழக்க அவைகள்
அஞ்சிப் பறந்து செல்வவாயின. எனவே, கலிங்கநாட்டு
நீர்வளங் குறித்தவாறாம். இக்கருத்தோடொப்ப,
1‘சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்
ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து
1. அகம் : 46.
ந. - 12
|