பக்கம் எண் :

200நளவெண்பா[ சுயம்பர காண்டம்]

இவ்வாறே சூரியன் தோற்றத்தை இளங்கோவடிகள் சிலப்பதிகாரப் பெருங்காப்பியத்தில்,

1‘வேலை மடற்றாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைத்
துளிநறவந் தாதூதத் தோன்றிற்றே காமர்த்
தெளிநிற வெங்கதிரோன் தேர்’

என்று கூறியதும் இதனோடு ஒத்த கருத்தாதலை உணர்க வெண்குமுதம் செங்குமுதம் என அல்லி இருவகைய. ஆயினும் செவ்வல்லி தோற்றத்தால் சிறந்திருத்தலின், அதனைமட்டும் கூறினும் இரண்டுக்கும் கொள்க என்னை ?

2ஒருமொழி யொழி தன் இனங்கொளற் குரித்தே’

என்பது விதியாகலான். சோற்றையுண்டான் என்னும்போது அதனுடன் சார்ந்த கறி குழம்பையும் உண்டானென்று கொள்ளப்படுதல் போல. (163)

தோழியர், தமயந்திக்கு அணிகள் அணிந்து அழகுறுத்தல்

171. இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசேர் இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண்.

(இ - ள்.) இன் உயிர்க்கு இளமுறுவலே நேர் என்கின்ற - (ஆடவர்தம்) இனிய உயிர்க்கு ஒத்தது இவளின் புன்னகை ஒன்றே என்று கூறுகின்ற, பொன் அழகை தாமே புதைப்பார் போல் - (வண்ணமகளிர்) திருமகளனைய தமயந்தியின் அழகை (அழகுபடுத்தற்குரியரான) தாங்களே மறைப்பார்போல, துடிசேர் இடையாளை - உடுக்கையின் நடுஇடம் போல் வடிவம் பொருந்தி மிளிர்கின்ற இடையையுடைய தமயந்திக்கு, மென் மலரும் சூட்டினார் - மெல்லிய மலர்மாலையும் (பிற பொன்மாலை முதலியனவும்) அணிவித்தனர், சூட்டி (அவ்வா) றணிவித்தபின், மின் இமைக்கும் பூண்பூட்டினார் - ஒளிவிடுகின்ற (பல்வகை) அணிகளையும் அணிந்தார்கள்.

(க - து.) ஆடவர், ‘தம் உயிரை யொத்தது இவள் தன் புன்னகை யொன்றே’ என்று போற்றுகின்ற தயமந்

1. சிலப்பதி. 6 : இறுதி வெண்பா. 2. நன்னூல் : 358.