தேமாங் கனிசிதறி வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதம்என் றிசையால்திசை போய துண்டே’
என்றார். இந்நிடத நாட்டில் மாமரம்
தழைத்துச் செழித்து வளர்ந்திருக்கின்றன ;
அதன்கீழ் வாழைமரங்கள் விரிந்த இலைகளைப்
பரப்பிக்கொண்டு கன்றுகளுடன் இருக்கின்றன;
மாம்பழம் மிகக் கனிந்து அக்கனிச் சாற்றைச்
சொட்டுச் சொட்டாக வடிக்கின்றன; அது வடிந்து
வாழைக்கன்றின் குருத்துக்களில்
நிறைந்துவிடுகின்றன; சோலைக்குச் சென்ற மயிலன
மங்கையர், அது நிறையத் தேன் இருப்பதால், ‘தேன்நிறைந்த
புட்டில் தானோ?’ என ஐயங்கொண்டு
நோக்குகின்றனர்; பெண்கள் ஐயங்கொள்ளுமாறு
அவ்வளவு வளமுள்ள சோலையெனச் சோலையின் ஏற்றங்
கூறினார்.
சுருள் - சுருண்டிருப்பதால் இங்கே
இளங்குருத்தை உணர்த்திற்று. குப்பி - புட்டில்;
இக்காலத்துப் ‘புட்டி’ எனவும், ‘பாட்டல்’
எனவும் வழங்குவர். திருமுருகாற்றுப் படையில்
நக்கீரனாரும் 1‘அம் பொதிப்புட்டில்’ என்றதூஉம்
காண்க. புட்டில், தக்கோலம் என்னும் முதலின் காய்
என்றும், அது, புட்டில் போறலிற் புட்டில் என்றும்,
நச்சினார்க்கினியர் உரை வகுத்ததும் கொண்டு
தெளிக. வை - கூர்மை. வேற்படைக்குச் சிறப்பு. அதனை
யேந்திய படையையுடைய நளமன்னனுக்குச் சிறப்புக்
கூறியவாறாம். (27)
நளன், தமயந்திக்குத் ‘தன்
மாவிந்தமாநகர் இதுதான்’
என்று காட்டல்
206. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான் தோன்றும் மற்றித் தடம்பதிதான் - வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே எங்கள் நகர்.
(இ - ள்.) வான் தோன்றி - சிறந்த
செங்காந்தட் செடிகள், வில் விளக்கே பூக்கும் -
ஒளி பொருந்திய விளக்குப்போல் மலர்கள்
தருகின்ற, விதர்ப்பநாடு ஆள் உடையான் - (வளம்
பொருந்திய) விதர்ப்ப நாட்டினை ஆள்கின்ற
உரிமைபெற்ற வீமமன்னனின், நல் விளக்கே - நல்ல
விளக்கென்னும்படி விளங்குகின்றவளே ! வான்தோய
நீண்டு உயர்ந்த - வானத்தைத் தொடுமளவுக்கு
நீட்சியாகி உயர்ந்திருக்கின்ற, மாடக் கொடி
நுடங்க - மாளிகை
1. திருமுருகு : 191.
|