பக்கம் எண் :

252நளவெண்பா[ கலிதொடர் காண்டம்]

கோல நிறம் - அழகாகப் பொன்போல் தோன்றும் உடலழகு. நீலம் - கருமை. 1‘நீனிற முகிலோ பசிய சைவலமோ’ என்னும் நைடதச் செய்யுளில், நீலம் கருமை என்னும் பொருள் தருதலை உணர்க. சுரிகுழல் : வினைத்தொகை. குழவி - குழந்தை. ‘குழ’ என்னும் இளமைப்பொருள் குறிக்கும் பண்படியாகப் பிறந்த பெயர்.

2‘மழவும் குழவும் இளமைப் பொருள’

என்பது தொல்காப்பியம். (30)

கலிமகன், பன்னிரண்டாண்டுவரை நளனைத் தொடரக்
காலம் பார்த்திருத்தல்

209. ஆண்டிரண்டா றெல்லை அளவும் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியும் காண்கிலான்-நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு.

(இ - ள்.) வெம்கலியும் - கொடுமையுள்ள கலிமகனும், காண்தகைய - காணுதற்கேற்ற, ஆண்டு இரண்டு ஆறு எல்லை அளவும் திரிந்தேயும் - (மிக்க காலமாகிய) ஆண்டுகள் பன்னிரண்டுவரை பின்பற்றித் திரிந்தும், நீண்டபுகழ் செம்நெறியால் பார்காத்த - பெரும்புகழோடு அறமுறையால் உலகைப் பாதுகாத்த, செங்கோல் நிலவேந்தன் - செங்கோற் சிறப்பினையுடைய நிடதநாட்டு மன்னனாகிய நளமன்னனின், தன் நெறியால் வேறு ஓர் தவறு காண்கிலான் - அவன் நெறிமுறை திறம்பாத் தன்மையினால் எந்த வேறுபட்ட ஒரு குற்றத்தையும் காணமாட்டாதவ னானான்.

(க - து.) கலியானவன், பன்னிரண்டாண்டு வரையும் காத்திருந்தும் நளமன்னன் நெறிமுறை கோடாத நீர்மையினால் அவனைச் சாரவொண்ணாது இருந்தான் என்பதாம்.

(வி - ரை.) கலி, முன்பு சூளுரைத்தவாறு நளனையும் தமயந்தியையும் தனித்தனியே பிரித்துத் துன்புறுத்தக் காலம் பார்த்திருந்தான். அவன் யாரையும் சார்ந்து துன்புறுத்த எண்ணினால், அவரிடம் சீர்முறைக்கேடான செய்கை வேண்டும். நளமன்னனிடம் எக்குறையும் காண்பதற்கில்லை. செங்கோல் முறையில்

1. நைடதம், அன்னத்தைத்தூது : 11. 2. தொல், உரியியல் : 15.