|
நாட்டை ஆள்கின்றான் ; குடிகட்கு நலஞ்செய்கின்றான் ;
ஒழுக்க முறை வழுவாது ஒழுகுகின்றான் ; எனவே அவன், என்றாவது
தவறான வழியில் நடக்கின்றானா? என்று காலம் நோக்கி
நோக்கிப் பன்னிரண்டாண்டுக் காலம்வரை பார்த்திருந்தான்.
குற்றங் காண்பதற்கில்லை.
இதனை ஆசிரியர் ‘ஆண்டிரண்டர் றெல்லை.......காண்கிலான்’
என்றார்.
செம் நெறி - நேர்மையான வழி :
கோல்முறை கோடாச் சிறப்பு. செங்கோல் :
செவ்விய கோல்போறலின் செங்கோலாட்சிக்
காயிற்று. இஃது உவம வாகுபெயர்.
நிலவேந்தன்-பாருக்கெல்லாம் அரசனென்றலுமாம். (31)
கலிமகன், நளமன்னனைச் சேர்தல்
210. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்கித் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து.
(இ - ள்.) சந்திசெய தாள்விளக்க -
(நளன் ஒருநாள்) கடவுள் வழிபாடு செய்தற்குத் தன்
கால்களை நீராற் கழுவ, தாளில் மறு தான் கண்டு -
கால்களில் நீர் நன்கு படியாது சிறு அளவு நனையாமல்
அழுக்கிருப்பதைக் கலியானவன் அறிந்து, புந்தி
மகிழ புகுந்து - தன் மனம் மகிழ நளன்பால் சார்ந்து,
சிந்தை எலாம் தன்வயமே ஆக்கி - நளனுடைய
எண்ணங்களை யெல்லாம் தனக்குரிமையாம்படி செய்து,
பொன் அசல மார்பன் புகைந்து - இமயமலையையொத்த
மார்பையுடைய நளமன்னனைச் சினந்து (பகைத்து),
தமையனுடன் இருந்தான் - (நளனுக்கு) அண்ணன்
முறைகொண்டுள்ளவனாகிய புட்கரனுடன் அவனுக்கு
உதவியாக இருந்தான்.
(க - து,) நளமன்னன், கடவுள் வழிபாடு
செய்தற்காக ஒருநாள் தன் கால்களைக் கழுவுகையில்
நீர் படாதிருக்கும் மறுவைக்கண்டு கலி மகிழந்து,
உடனே அவன்பாற் புகுந்து அவன் எண்ணமெல்லாம் தன்
எண்ணமாக்கிப் புட்கரனுடன் சார்ந்திருந்தான்
என்பதாம்.
(வி - ரை.) சந்தி -
சந்தியாவந்தனம் என்னும் வடசொல்லின்
கடைக்குறைபெற்ற சொல். அது கடவுளைத் தொழுதல்
என்னும் பொருளது. சந்தியாவது பகலும் இரவும் ஒன்று
கலந்த
|