|
முரண்தொடை அழகு பொலிந்திருத்தலை நோக்குக.
உற்றதுயர் -நிலைபெற்றிருக்கும் வருத்தம். அன்றித்
தன்பால் வந்துள்ள வருத்தம் என்னலுமாம். மற்று -
அசைநிலை, நின்றாள் : இறந்த
கால வினையாலணையும் பெயர். கண்டேம் : உளப்பாட்டுத்
தன்மைப்பன்மை வினைமுற்று. பல சேடியர் கண்டனராகலின்
இவ்வாறு கூறினாரென்க. (138)
சேதியரசி தன் பணிப் பெண்களை
நோக்கி,
‘அவளை அழைத்துவருக’ எனல்
317. யோகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை அறியவே - நீயேகிக்
கொண்டுவா என்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து
வண்டுவாழ் கூந்தல் மயில்.
(இ - ள்.) வண்டு வாழ் கூந்தல் மயில்
- வண்டுகள் (மலர்த் தேனை உண்பதற்குத்) தங்கியிருக்கின்ற
கூந்தலையுடைய மயில் போன்ற சேதியரசியானவள், தன்
கொவ்வைக் கனிதிறந்து - தன்னுடைய சேவைக்கனிபோன்ற
செவ்வாய் திறந்து,
புனை இழையாய் - அணிந்துள்ள நகைகளையுடைய சேடியே!,
பூங்குயிலை ஆய மயிலை - (நீவிர் கூறிய) அழகிய குயில்
போன்றாளைச் சிறந்த மயிலனையாளை, அறிய - (இன்னாளெனக்
கேட்டுத்) தெரிந்துகொள்ளற்கு,
போய் அகலா முன்னம் - அவள் அவ்விடத்தைவிட்டுச்
செல்வதற்கு முன்பாக, நீ ஏகி - நீ சென்று, கொண்டுவா
என்றாள் - அழைத்து கொண்டுவருக என்று (அவர்களுள் ஒரு
சேடியைப் பார்த்துக்) கூறினாள்.
(க - து.) தமயந்தியின் தன்மையைக் கூறிய சேடியருள்
ஒருத்தியைச் சேதியரசி நோக்கி,
‘சேடியே ! நீவிர் கூறிய அவள் அந்த இடத்தைவிட்டுச்
சென்றுவிடுமுன் இங்கே அழைத்துக் கொண்டுவா’ என்று
கட்டணை இட்டாள் என்பதாம்.
(வி - ரை.) ‘போய் அகலா முன்னம்’ என்பது, ‘அவள்
அந்த இடத்தினின்றும் அகன்று செல்வதற்கு முன்பாக
விரைவில் அழைத்து வருக’ என்னும் குறிப்பினை யுடையது. புனை
இழையாய் : வினைத்தொகை. பூகுயில் ஆயமயில் என்பன ஆகு
பெயராகத் தமயந்தியைக் குறித்தன. குயிலென்றமையால் குயிற்
குரல்போன்ற அவள் மென்சொல்லால் அவள் வரலாறு
|