1‘திருவினும் நல்லாள் மனைக்கிழத்தி
யேனும்’
என்று குமரகுருபர அடிகளார் நீதிநெறி
விளக்கத்தில் கூறுவதுங் காண்க. அடுமாற்றம் -
அடுதற்கான மாறுபாடு: கொல்லத்தக்க பகைமை. இல்லா -
இல்லாத என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப்
பெயரெச்சம். தடுமாற்றம்: தொழிற்பெயர் ; ஒரே
சொல். ஏயும் தானும் அசைச் சொற்கள். (28)
அன்னம், நளனுக்குத்
தமயந்தியைப்பற்றிக் கூறல்
36. திசைமுகந்த வெண்கவிகைத்
தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.
(இ - ள்.) திசை முகந்த வெண் கவிகை
தேர் வேந்தே - எட்டுத் திக்குகளிலும் பரவிய
வெண்கொற்றக் குடையையுடைய தேரினையுடைய மன்னனே !
உன்தன் இசைமுகந்த தோளுக்கு - உன்னுடைய புகழ்மிக்க
தோள்களுக்கு, மென்தோள் அமை அந்தி என்று ஓர்
அணங்கு - மெல்லிய தோள்களாகிய மூங்கில் அழகி
என்னும் ஒப்பற்ற தெய்வமகளாகிய, வசை இல்
தமையந்தி என்று ஓதும் தையலாள்- குற்றமற்ற
தமயந்தி என்று பெயர் கூறப்படுகின்ற ஒருத்தி,
இசைவாள் - பொருத்தமுடையவளாவாள்.
(க - து.) அன்னம் நளனைப்பார்த்து,
‘வேந்தே ! உன் இசைமுகந்த தோளுக்கு
மூங்கில்போன்ற தோளுடைய தமயந்தியே
ஏற்றவளாவாள்,’ என்றது.
(வி - ரை.) நளமன்னன், திசைமுகந்த
தோளழகன், தமயந்தி மூங்கில்போன்ற தோள்
அழகினாள் ; இருவருக்குமே மணம் பொருத்தமாகும்
என்றபடி. திருமணத்துக்கு நாட்குறிக்கும் முன்,
ஆட்பொருத்தம் பார்த்தல்வேண்டும் ஆகையால்,
தோட்பொருத்தம் கூறினார்.
திசை முகத்தல் - திக்குகளைத்
தன்னிடத்தடக்குதல். நளமன்னன் தன்
ஆட்சிமுறையினால் எங்கும் புகழ் மணக்க இருந்து
ஆண்டான் என்பது குறிப்பு. கவிகை - கவித்தலையுடைய
தென்னும் பொருட்டாய் ஈண்டுக் குடையைக் குறித்தது.
நிலை, புதையல், படை என்பனபோல.
1. நீதிநெறி : 80.
|