தமையந்தி : ஐகாரம் இடைப்போலி ;
எதுகை நோக்கி வந்தது. அணங்கு:
அணங்குபோல்வாளாகிய தமயந்தி என விரித்துப்
பொருள்கொள்ளக்கிடத்தலால் உவமவாகு பெயர்.
அந்தி - அந்தத்தை (அழகை) உடையாள். அந்தம் - அழகு.
அதனையுடையாள் அந்தி யெனப்பட்டாள். (29)
‘ தமயந்தி, யார் மகள் ?’ என்று நளன்
அன்னத்தை வினவல்
37. அன்னம் மொழிந்த மொழிபுகா
முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை என்றான் அனங்கன் சிலைவளைப்ப
பார்மடந்தை கோமான் பதைத்து.
(இ - ள்.) அன்னம் மொழிந்த மொழி
புகாமுன் - அன்னப் பறவை எடுத்துக்கூறிய அச்சொல்
தன் செவியில் நன்கு நுழையும் முன்பே, மனக்கோயில்
கன்னிபுக்கு கைக்கொள்ள - தன் மனமாகிய
கோவிலுக்குள் தமயந்தி சென்று (அதைத்) தனக்
குரிமையாக்கிக் கொண்டதனால், அனங்கன்
சிலைவளைப்ப - மன்மதன் தன் கரும்புவில்லை வளைத்து
அம்பு தொடுத்தெய்ய, பார்மடந்தை கோமான்
பதைத்து - நிலமகளுக்குத் தலைவனான நளன் துடிதுடித்து
(காதலால் மயக்குற்று), சொன்னமயில் ஆர் மடந்தை
என்றான் - நீ கூறிய மயிலனையாள் யார் பெற்ற
மகளென்று வினாவினான்.
(க - து.) அன்னஞ் சொன்னசொல் தன்
காதில் படுமுன் ‘அவள் யார் மகள் ?’ என்று நளன்
அன்னத்தைக் கேட்டான் என்பதாம்.
(வி - ரை.) புகா - ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம். அனங்கன் -
உடலற்றோன்: மன்மதன். சிலைவளைப்ப - ஈண்டுக்
காரியப்பொருட்டாய்வந்த செயவெனெச்சமாதலால்,
‘வில்லை வளைத்து அம்பு தொடுத்தெய்ய’ என்று
பொருள் கூறப்பட்டது. மயில்போன்ற சாயலுடையாளை
மயிலென்றது ஆகுபெயர். கன்னி - கட்டழகுடையவள்.
பார்மடந்தை கோமான் - நிலமகளுக்கு முதல்வனானவன்.
இக்கன்னிக்காகப் பதைத்து நின்றான் என்னும்
நயம் தோன்றநின்றது. ஆர் - யார் என்பதன் மரூஉ.
யானை - ஆனை ; யாறு - ஆறு ; யாடு - ஆடு என்பன போலக்
கொள்க. (30)
|