பக்கம் எண் :

430நளவெண்பா[ கலிநீங்கு காண்டம்]

ளும் நளனைச் சுடாத - வெப்பந்தராத வரங்கொடுத்தான். அதை
நளன் ஈண்டுக் கருதினானென்க. கருதினவன், பாம்பின் பக்கலிலே
நெருப்பு மிக்க இடத்தே சென்றான் ; நளன் வந்ததைக் கண்ட நெருப்புக்கடவுள் தான் கொடுத்த வரத்தை யெண்ணினான் ; தன் சுடுந்தன்மையைக் குறைத்தான் ; அதனால் நளன் நெருப்புத் தணல்களுக்கு ஊடே அஞ்சாது சென்றான். இக்கருத்துக்களை அமைத்து, ‘ஆரழலோன் அஞ்சி........புக்கான்’ என்றார். உடைந்தான் என்பது இங்கே நெருப்பின் சுடுந் தன்மை குறைந்து நின்றதைக் குறித்தது. அதனால் தன் வேகந் தணிந்தான் என்று பொருள் கூறப்பட்டது. புக்கான் - சென்றான். தன்னொற்றிரட்டிப் பகுதியே இறந்த காலங்காட்டிற்று. (5)

பாம்பு, நளனை நோக்கித் தன் வரலாறு உரைத்தல்

339. வேத முனிஒருவன் சாபத்தால் வெங்கானின்
ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன்-காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.

(இ - ள்.) (பாம்பு மன்னன்) மாலை மணிவண்டு சந்து எடுத்த தோளானை தான் - மலர்மாலையிலுள்ள அழகான வண்டுகளானவை இசைப்பாடல் பாடுகின்ற தோள்களையுடைய நளமன்னனை நோக்கி, வேதமுனி ஒருவன் சாபத்தால் - மறைப் பொருளுணர்ந்த முனிவன் ஒருவனுடைய கெடுச்சொல்லினால், வெம்கானில் ஆதபத்தின் வாய்பட்டு அழிகின்றேன் - இக்கொடிய காட்டினிடத்தில் நெருப்பினுள் அகப்பட்டுக்கொண்டு வருந்துகின்றேன், காதலால் வந்து எடுத்து கா என்றான் - (என்பால்) அன்புகொண்டு (என் அருகில் வந்து என்னை இந்நெருப்பினின்றும்) எடுத்துவிட்டுக் காப்பாயாக என்று வேண்டினான்.

(க - து.) பாம்பு அரசனானவன், நளமன்னனைப் பார்த்து ‘வேதப்பொருளறிந்த ஒரு முனிவன் கெடுமொழியினால் நான் இந்நெருப்பின்வாய்ப்பட்டு வருந்துகிறேன்; என்னை எடுத்துக் காப்பாற்றுக’ என்று வேண்டிக்கொண்டான் என்பதாம்.

(வி - ரை.) வேதமுனி - மறைப்பொருளறிந்தவன். ஒருவன் - ஒப்பற்றவனென்றலுமாம். ஒப்பற்றவன், வெகுண்டு கூறினும் அருளிக் கூறினும் அப்பயனைத்தரும் சொல்லாற்றல் மிக்க சிறப்புள்ளவன். முனிவராவார் மனத்தைப் புலன்வழிச் செல்ல