பக்கம் எண் :

மூலமும் உரையும்433

வனுமான நளமன்னன், எடுத்து அரவு அரசை கொண்டு அகன்றான் - அக்கார்க்கோடகனைத் (தன் கைகளால்) தூக்கிக் கொண்டு அவ்விடத்தைவிட்டுச் சென்றான்.

(க - து.) அப்பாம்பரசன், அவ்வாறு வேண்டிக் கொண்டபோதே நளமன்னன் அவனைத் தன் கைகளால் தூக்கி எடுத்துக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கிச் சென்றான் என்பதாம்.

(வி - ரை.) என்று என்னும் இடைச்சொல், மேற் கூறியதைக் குறித்து நின்றது. ஏழு உலகு - எல்லா நாடுகளையும் என்னும் பொருளது. சூழ்கடல்: வினைத்தொகை. கடல் சூழ்ந்த உலகையெல்லாம் தன் குடைக்கீழ் அடக்கியாண்ட நளமன்னன் சிறப்பைக் குறிக்க ‘குன்றும் சுமந்த குலப்புயத்தான்’ என்றார். குலப்புயம், போரென்ன வீங்கும் பொற்புடையதென்னும் கருத்துக்கொண்டது. ஆரணியம்: வடசொல், பெருங்காடு. இரவு - இருள். அரசு - அரசன்போன்றது. இரவு சிறந்ததென்னும் பொருளது. சிறந்த தென்னையெனின் இருள் கன்னங்கரேலெனக் கட்புலன் கதுவாதவாறு செறிந்து நிறைந்திருத்தல். அந்த இருளினும் அஞ்சாது தமயந்தியைவிட்டுவிட்டுத் தன்னந் தனியாக ஊக்கத்துடன் சென்ற நளனுடைய மனத்திண்மை நிலைதோன்ற ‘இரவரசை வென்றான்’ என்றார். வெல்லுதல் - ஈண்டு அதனைப் பொருட்படுத்தாது செல்லல். (8)

அரவரசன், பத்துவரை எண்ணித் தன்னைக் கீழே விடுமாறு
நளனை வேண்டல்

342. மண்ணின்மீ தென்றனைநின் வன்தாளால் ஒன்றுழதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த உதவிக்கு மாறாக
ஏவலால் தீங்கிழைப்பேன் என்று.

(இ - ள்.) போர்மா வலான் - போர்க்குதிரைகளின் மன நிலையறியும் தன்மையுடையவனாகிய நளமன்னன், நண்ணி செய்த உதவிக்கு மாறு ஆக - தன் பக்கலில் வந்து தனக்குச் செய்த நன்றிக்குக் கைம்மாறுதவியாக, ஏவலால் தீங்கு இழைப்பேன் என்று - நளன் கட்டளையாலாயே அவனுக்கு (நன்மை தரும்) தீமையைச் செய்வேனென்று துணிந்து, மண்ணின் மீது - இப்பூமியிடத்தில், என்தனை நின் வன்தாளால் ஒன்று முதல் - என்னை நீ உன்னுடைய வலிமையுள்ள கால்களினால் ஒன்று முதலாக, தச

ந. - 28