|
(இ - ள்.) பொறிவண்டு புன்னை
நறும்தாது கோதி - புள்ளிகளையுடைய ஆண் வண்டு
புன்னைப் பூவின் நறுமணமுள்ள மகரந்தப் பொடியைக்
கிண்டிவிட்டு, கன்னிபெடை உண்ண காத்து இருக்கும் -
(தன் காதலியாகிய), பெண் இளவண்டு தேனை உண்ணும்வரை
காத்துக்கொண்டிருக்கின்ற, இன் அருள்கண்டு - (அதன்)
நல்ல பேரன்பினை நோக்கி, அஞ்சினான் -
(நளமன்னன் தன்னிலையை யெண்ணி)
அச்சங்கொண்டான், அறஉயிர்த்து நெஞ்சினாள்
எல்லாம் நினைந்து ஆவி அழிந்தான் - மிகவும்
பெருமூச்சுவிட்டு தன் மனத்தில் (தான் தமயந்தியை
விட்டுவந்த செயலை) எண்ணியெண்ணி உயிர்வாடினான்.
(க - து.)தன் பெண் வண்டு
தேனுண்பதைப் பார்த்துக்கொண்டு அது உண்ணுமட்டும்
காத்திருக்கின்ற ஆண் வண்டின் பேரன்பு நிலையைப்
பார்த்து நளன் தான் தன் மனையாளை வஞ்சித்துவந்த
செயலை நினைந்து வருந்தினான் என்பதாம்.
(வி - ரை.) புன்னை யென்னும்
முதற்பொருளின் பெயர் அதன் சினையாகிய
மலருக்காதலால் பொருளாகு பெயர். கோதுதல் - தன்
வாயானும் கால்களானும் கிளைத்தல் (கிளறிவிடுதல்.
2‘குப்பை கிளைப்போவாக்
கோழிபோல்’
என்பதூஉம் அது. பொறிவண்டு-தன்
உடம்பெல்லாம் புள்ளிகள் பெற்ற ஆண் வண்டு. ‘பொறிவண்டு’
என்று ஈண்டுப் பொதுப் பெயராகக் கூறினாரேனும்
ஒன்றொழி பொதுச் சொல்லாக ஆண் வண்டினைக்
குறித்தது. மேல், ‘கன்னிப் பெடை’ என்றமையான்.
கன்னி - இளமை, கட்டழகுமாம்.
3‘கன்னி இளவாழை கனி ஈவ’
என்ற கம்பருரையும் இப்பொருட்டு. ஆண்
வண்டு, தன் பெடை வண்டு தேன் உண்ணாது இருப்பதறிந்து
தான் புன்னைப் போதைக் கிளைத்துக்கொடுத்து
அதிலுள்ள தேனை அது பருகும்பரையும்
காத்துக்கொண்டிருப்பதை
நளன் கண்டான் ; அதன் பேரன்பைத் தன்
காதலிமாட்டுக்கொண்ட
வற்றாத இன்னருளைக் கண்டான் ; ஓர் அஃறிணைஉயிர்.
அது தன் காதலிபால் இவ்வாறான வானினுமுயர்ந்த
அன்புகாட்ட நாம் கற்பித் சிறந்த காதலியை, ‘குற்றமில்...மைந்தரையும்,
பெற்றுக்கொளலாம் பெறலாமோ... கோக்காதலனைக்
குலமகளுக்கு’ (கலிதொடர் : 66) என்று
2. நாலடியார் : 341. 3, கம்பரா, ஆரணிய,
அகத்திய : 58.
|