பக்கம் எண் :

மூலமும் உரையும்487

னான வீமனுக்கு, தன் வரவு கூற பணித்து - தன் வருகையை அறிவிக்கும்படி (வாயில் காவலர்கட்குக்) கட்டளையிட்டு அனுப்பி, (தான் தேரினின்றும் கீழிறங்கிச் சென்று), மகிழ்ந்து தனி புக்கான் - மகிழ்வுகொண்டு தான் மட்டும் (அரண்மனையினுள்) சென்றான்.

(க - து.)இருதுபன்னன், தான் வந்த தேரை அரண்மனை முற்றத்திடத்தே நிறுத்திவிட்டுத் தன் வருகையை வீமமன்னனுக்கு அறிவிக்கும்படி வாயிற் காவலர்களிடம் கூறியனுப்பித் தான் மட்டும் அரண்மனைக்குள் மகிழ்வோடு சென்றான் என்பதாம்.

(வி - ரை.) வெற்றித்தனித்தேர் - தான் மட்டும் சுயம்வரமென்று கேள்வியுற்றுச்சென்றவனாதலால் அதை விளக்க வெற்றித் தனித்தேரென்றார். அன்றி, வெற்றி பெறாத தன்மையைச் சுட்டிக் காட்டி இழிவு சிறப்பாகக் கூறினாரென்றலுமாம். கோ+இல் - கோயில் : அரசன் இல்லம். அது அரண் சூழ்ந்திருப்பதால் அரண்மனையெனப்படும். பின்னரே இறைவன் உறையும் கோட்டத்துக்கு ஆயிற்று. முற்றம் - அரண்மனைவாசல் இடம். தன்வரவு கூறப்பணித்து என்றமையால் அதற்கேற்ற எழுவாயாகக் காவலர் என்ற சொல் வருவித் துரைக்கப்பட்டது. தனிப்புக்கான் என்றமையால் தேரோட்டிவந்த நளன் உட்செல்லாது வெளியே நின்றான் என்பது பெற வைத்தார். பணித்தல் . சொல்லுதல், ஏவுதல் என்னும் பொருட்டாக வந்தது. மன் - நிலைபெறுதல். விரவுதல் - கலத்தல், ஒன்றாதல், நிலைபெறுதல் என்பது மாலைக்கு என்னையெனின்?, மாறாமல் என்றும் வீரத்திரு நிலைத்திருக்க வாகை வனமாலை சூடி அரசர் உறைகின்ற அத்தாணி மண்டபத்தே வீறுடன் இருத்தல். (50)

இருதுபன்னனை வீமன் வினவுதல்

384. கன்னி நறுந்தேறல் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.

(இ - ள்.) கமலத்தின் கன்னி நறும் தேறல் மாந்தி - (இருது பன்னனை வீமன் நோக்கி) தாமரை மலரில் உள்ள புதிய மணமுள்ள தேனைக் குடித்து, மன்னிதுயின்ற வரிவண்டு - அதில்