|
ஆற்றி-முதன்மையான நீண்ட தேரில்
பூட்டியிருந்த குதிரைகளை அவிழ்த்துவிட்டு அவைகளை
இளைப்பாற்றி, கோதுஇல் அடிசில் குறைமுடிப்பான்
மதித்து - குற்றமற்ற சமையல் முடித்தலாகிய தான்
செய்யவேண்டிய வேலையின் அறுகுறையை முழுதும்
முடிப்பதற்கு எண்ணங்கொண்டு, மடைடடயில் புக்கான் -
சமையலறைக்குச் சென்றான்.
(க - து.)வாகுகனாகிய நளன்,
தேர்க்குதிரைகளை அவிழ்த்துவிட்டு, அவைகளைக்
களைப்பாற்றியபின் சமையல் தொழிலை முடிக்கக்
கருதிச் சமையலறைக்குச் சென்றான் என்பதாம்.
(வி - ரை.) ஆதி - பழமையென்ற
பொருளில் வாராது ஈண்டு முதன்மையென்ற பொருளில்
வந்தது. மற்ற எல்லா வகைத்தேரினும் இஃது
உயர்ந்ததென்னும் பொருளது என்பதை விளக்க
நெடுந்தேர் என்னும் சொல்லாற் குறித்ததூஉமறிக.
பரி - குதிரைகள் : சாதியொருமை. விட்டு -
அவிழ்த்துவிட்டு என்னும் பொருளது. அவை : பன்மை.
மேதி - எருமை. கடைவாயில் - வாயிற்கடை என மொழி
மாற்றுக : இது சொல்நிலை மாறிய இலக்கணப் போலி.
கார்நீலம் - கருநிறமுள்ள குவளைமொட்டு. குவளை தன்
அரும்பு அவிழ்ந்து மலர்தலை ‘கண் விழிக்கும்’
என்றார். அது இளநங்கையர் இருவிழி
போன்றிருத்தலால் ‘கண்’ என்றார் : உவம
ஆகுபெயர். குவளையை மேய்ந்து செல்லும் எருமைகள்,
தம் வாயிற்கொண்ட குவளைக் கொடிகளைச் சிறிது
சிறிதாக மென்றுகொண்டு வாய்க்குள் அடக்குங்கால்
அக்கொடிகளில் மலரும் பருவத்திலுள்ள பேரரும்புகள்
அவ்வதிர்சியினால் மலர்கின்றன. அத்தகைய
நீர்வளனும் நிலவளனுஞ் செறிந்தநாடு, நிடதநாடு ;
அந்நாட்டுக்குரிய வேந்தன்
இன்று என்ன செய்கின்றான்? தேர்ஓட்டுகின்றான் ;
குதிரையை
அவிழ்த்து விடுகின்றான் ; அவைகட்குக்
களைப்பாற்றுகின்றான் ; பின்னர் மடைத்தொழில்
புரிகின்றான் எனக் கழிவிரக்கங் கொள்வாராய்,
அவன் அரசாட்சிச் சிறப்பும் பண்பும் பிறவும் கூறி,
இவ்வாறு ‘கடைவாயில்........மதித்து’ என்றார்.
புகு+ஆன் - புக்கான் எனத் தன்னொற்றிரட்டி
இறந்தகாலம் காட்டிற்று, நக்கான் என்பதுபோல. (53)
வாகுகன் சமையல் தொழிலால் சோறு
கறிகள் நிரம்புதல்
387. ஆதி மறைநூல் அனைத்தும் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாமல் எல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.
|