மங்குல்நிகர்
சனிவாரம் நல்லதாம்; இதனினும்
மனமொத் திருந்த இடமே
வாலாய மாய்ப்போய் விருந்துண விருந்துதவ
வாய்த்தநாள் என்ற றியலாம்;
அங்கையில் விளங்கிவளர் துங்கமழு வாளனே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அம்கையில் விளங்கி வளர்துங்கம்
மழுவாளனே -
அகங்கையில் விளக்கமுற்று ஒளிரும் தூய மழுவையுடையவனே!,
அண்ணலே - பெரியோனே!, அருமை ...... தேவனே!, செங்கதிர்க்கு
விருந்து ஒருவர் செய்ய ஒணாது; உண்ண ஒணாது; உறவு போம், பகை
வரும் - ஞாயிற்றுக்கிழமையில் ஒருவர் விருந்துசெய்யவும் உண்ணவும்
ஒவ்வாது, (செய்தால்) உறவு நீங்கிப் பகை உண்டாகும், திங்களுக்கு உறவு
உண்டு; நன்மைஆம் - திங்கட் கிழமையில் (விருந்துண்டால்) உறவு வரும்;
வேறு நன்மையும் உண்டாகும், செவ்வாய் விருந்து அருந்தார், பகை வரும்
- செவ்வாய்க்கிழமையில் விருந்துண்ணமாட்டார், (உண்டாற்) பகையுண்டாகும்,
பொங்கு புதன் நன்மை உண்டு; உறவுஆம் - நலம்மிகு புதன்கிழமையில்
நலமுண்டாகும், உறவும் உண்டாகும், பொன்னவற்கு விருந்து உண அதிக
பகைஆம் - வியாழனில் விருந்துஉண்டால் மிகு பகைவரும், புகரவற்கு
ஆகிலோ நெடுநாள் விரோதமாய்ப் போன உறவும் திரும்பும் -
வெள்ளிக்கிழமையானால் நீண்ட நாட்களாகப் பகையான உறவினரும்
திரும்புவர், மங்குல் நிகர் சனிவாரம் நல்லது ஆம் - முகில் அனைய
சனிக்கிழமை நலம் உண்டாகும், இதனினும் மனம் ஒத்து இருந்த இடம்
வாலாயமாய்ப்போய் விருந்துஉண விருந்துஉதவ வாய்த்தநாள் என்று
அறியலாம் - மேலும் இந்த நாளே உளம் ஒத்தும் உள்ள இடத்தில்
வழக்கமாகச்சென்று விருந்து உண்ணவும் செய்யவும் பொருந்திய நாள் என
உணரலாம். |
|
|
|