(வி-ரை.)
சனியின் நிறம் கருமையாகையால், ‘மங்குல் நிகர்
சனி'
என்றார். அகம் + கை - அங்கை.
(க-து.) விருந்து உண்ணவும் செய்யவும்
ஞாயிறு, செவ்வாய், வியாழன்
தகாதவை; மற்றவை நலமானவை.
69.
பூப்பு வாரம்
அருக்கனுக் கதிரோகி யாவள்;நற் சோமனுக்
கானகற் புடைய ளாவாள்;
அங்கார கற்குவெகு துக்கியா வாள்;புந்தி
அளவில்பைங் குழவி பெறுவாள்;
திருத்தகு வியாழத்தின் மிக்கசம் பத்தினொடு
சிறுவரைப் பெற்றெ டுப்பாள்;
சீருடைய பார்க்கவற் கதிபோக வதியுமாம்;
திருவுமுண் டாயி ருப்பாள்;
கருத்தழிந்து எழில்குன்றி வறுமைகொண்டு அலைகுவாள்
காரிவா ரத்தி லாகில்;
களபமுலை மடமாதர் புட்பவதி யாம்வார
காலபலன் என்று ரைசெய்வார்;
அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட சோதியே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அருத்தியுடன் எளியேனை ஆட்கொண்ட
சோதியே -
அன்புடன் எளிய என்னை அடிமையாக ஏற்ற பேரொளியே!; அருக்கனுக்கு
அதிரோகி ஆவாள் - ஞாயிற்றுக் கிழமையில் மிகுநோயுடையவள் ஆவள்,
நல்சோமனுக்கு ஆனகற்பு உடையவள் ஆவாள் - நல்ல திங்களில்
மிகுதியான கற்புடையவள் ஆவாள், அங்காரகற்கு வெகு துக்கி ஆவாள் -
செவ்வாயில் மிகுந்த வருத்தமுடையவள் ஆவாள், |