71.
தீவும் கடலும்
நாவலந் தீவினைச் சூழ்தரும் கடலளவு
லட்சம்யோ சனை;இ தனையே
நாள்தொறும் சூழ்வதில வந்தீவு; அதைச்சூழ்தல்
நற்கழைச் சாற்றின் கடல்;
மேவுமிது சூழ்வது குசத்தீவ தைச்சூழ்தல்
மிகுமதுக் கடல்;அ தனையே
விழைவொடும் சூழ்தல்கிர வுஞ்சதீ வம்இதனின்
மேற்சூழ்தல் நெய்க்க டலதாம்;
பூவில்இது சூழ்தல்சா கத்தீவம்; இங்கிதைப்
போர்ப்பது திருப்பாற் கடல்;
போவதது சூழ்தல்சான் மலிதீவம் ஆம்; தயிர்ப்
புணரிஅப் பாலும் அப்பால்
ஆவலுறு புட்கரத் தீவாம் இதைச்சூழ்வ
தரும்புனற் றருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அருமை
...... தேவனே!, நாவல்அம் தீவினைச் சூழ் கருங்கடல்
அளவு லட்சம் யோசனை - நாவலந் தீவாகிய இதனைச் சூழ்ந்த கருங்கடலின்
பரப்பு இலட்சம் யோசனை, இதனையே நாள்தொறும் சூழ்வது இலவம்தீவு -
இந்தக் கடலை எப்போதும் சூழ்ந்திருப்பது இலவந்தீவு, அதைச் சூழ்தல்
நல்கழைச் சாற்றின் கடல் - அதனைச் சூழ்ந்திருப்பது இனிய கருப்பஞ்சாற்றுக்
கடல், மேவும் இது சூழ்வது குசத்தீவு - பொருந்திய இதனைச் சூழ இருப்பது
குசத்தீவு, அதைச் சூழ்தல் மிகும் மதுக்கடல் - குசத்தீவைச் சூழ்வது மிகுந்த
மதுவின் கடல், அதனை விழைவுடன் சூழ்தல் கிரவுஞ்ச தீவம் - மதுக்கடலை
விருப்பத்துடன் சூழ்ந்திருப்பது கிரவுஞ்ச தீவு, இதனின்மேற் சூழ்தல்
நெய்க்கடலது ஆம் - கிரவுஞ்சத் தீவினைச் சூழ்ந்திருப்பது நெய்க்கடல்
|
|
|
|