(வி-ரை.)
முத்தமிழ் : இயல்,
இசை, நாடகம். நாற்கவிதை : ஆசு,
மதுரம், சித்திரம், வித்தாரம். நாற்பொருள் : அறம், பொருள், இன்பம், வீடு,
இலக்கண விகற்பம் : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, பிரபந்தம் :
சிறு நூல்கள். அவை: பிள்ளைத்தமிழ். பரணி, கலம்பகம் முதலியன.
76.
நற்சார்பு
காணரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பதே
கண்ணிணைகள் செய்புண் ணியம்;
கருணையாய் அவர்சொல்மொழி கேட்டிட லபிப்பதுஇரு
காதுசெய் திடுபுண் ணியம்;
பேணிஅவர் புகழையே துதிசெய லபித்திடுதல்
பேசில்வாய் செய்புண் ணியம்;
பிழையாமல் அவர்தமைத் தொழுதிட லபிப்பதுகை
பெரிதுசெய் திடுபுண் ணியம்;
வீணெறிசெ லாமலவர் பணிவிடை லபிப்பதுதன்
மேனிசெய் திடுபுண் ணியம்;
விழைவொடவர் சொற்படி நடந்திட லபிப்பதே
மிக்கபூ ருவபுண்ணியம்;
ஆணவம் எனுங்களை களைந்தறி வினைத்தந்த
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) ஆணவம்எனும்
களைகளைந்து அறிவினைத் தந்த அண்ணலே
- நான் என்னும் களையை யெடுத்து, அறிவையருளிய பெரியோனே!, அருமை
..... தேவனே!, காண்அரிய பெரியோர்கள் தரிசனம் லபிப்பது
கண்இணைகள்செய் புண்ணியம் - பார்த்தற்கரிய பெரியோர்களின் சேவை
கிடைப்பது இருவிழிகளின் நல்வினையாகும், கருணையாய் அவர் சொல்மொழி
கேட்டிட லபிப்பது இரு காது செய்திடு புண்ணியம் - அவர்கள் அருளுடன் கூறும்
|