பக்கம் எண் :

133

ஆபத்தெ லாந்தவிர்த் தென்னையாட் கொண்டருளும்
     அண்ணலே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
ஆபத்து எலாம் தவிர்த்து என்னை ஆட்கொண்டருளும்
அண்ணலே - இடையூறுகளை யெல்லாம் நீக்கி என்னை
ஏற்றுக்கொண்டருளும் பெரியோனே!, அருமை.....தேவனே!, கோபமே
பாவங்களுக்கு எல்லாம் தாய்தந்தை - சினமே எல்லாப் பாவங்களுக்கும்
அன்னையும் அப்பனும் ஆகும், கோபமே குடிகெடுக்கும் - சினமே குடியைக்
கெடுக்கும், கோபமே ஒன்றையும் கூடிவரவொட்டாது - சினமே எதனையும்
அடைய விடாது, கோபமே துயர்கொடுக்கும் - சினமே துயரந்தரும், கோபமே
பொல்லாது - சினமே கெட்டது, கோபமே சீர்கேடு - சினமே புகழைக்
கெடுப்பது, கோபமே உறவு அறுக்கும் - சினமே உறவைத் தவிர்க்கும்,
கோபமே பழி செயும் - சினமே பழியை யுண்டாக்கும், கோபமே பகையாளி
- சினமே மாற்றான், கோபமே கருணை போக்கும் - சினமே அருளைக்
கெடுக்கும், கோபமே ஈனம் ஆம் - சினமே இழிவாகும், கோபமே எவரையும்
கூடாமல் ஒருவன் ஆக்கும் - சினமே ஒருவரையும் சேர்க்காமல்
தனியனாக்கும், கோபமே மறலிமுன் கொண்டுபோய்த் தீய நரகக்குழியில்
தள்ளும் - சினமே காலன்முன் இழுத்துச்சென்று கொடிய நரகக் குழியிலே
வீழ்த்தும்.


     (வி-ரை.)
ஆல் : அசை. ‘ஆறுவது சினம்' என்றார் ஒளவையார்.
‘தீராக் கோபம் போராய் முடியும்' என்றார் நறுந்தொகையார்.


     (க-து.)
சினத்தைத் தவிர்த்தல் வேண்டும்.