90. காமன்
அம்பும் அவற்றின் பண்பு முதலியனவும்
வனசம்,
செழுஞ்சூத முடன், அசோ கம்தளவம்,
மலர்நீலம் இவைஐந் துமே
மாரவேள் கணைகளாம்; இவைசெயும் குணம்; முளரி
மனதிலா சையையெ ழுப்பும்;
வினவில்ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும்;
மிகஅசோ கம்து யர்செயும்;
வீழ்த்திடும் குளிர் முல்லை; நீலம்உயிர் போக்கிவிடும்;
மேவும்இவை செயும்அ வத்தை;
நினைவில்அது வேநோக்கம், வேறொன்றில் ஆசையறல்,
நெட்டுயிர்ப் பொடுபி தற்றல்,
நெஞ்சம் திடுக்கிடுதல், அனம் வெறுத்திடல், காய்ச்சல்
நேர்தல், மௌனம் புரிகுதல்,
அனைவுயிர் உண்டில்லை என்னல்ஈ ரைந்தும் ஆம்!
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அத்தனே - தலைவனே!, அருமை ........
தேவனே!, வனசம்
செழுஞ்சூதமுடன் அசோகம், தளவம், மலர்நீலம் இவை ஐந்துமே மாரவேள்
கணைகள் ஆம் - தாமரை, வளமிகுந்த மா, அசோகு, முல்லை, மலர்ந்த
நீலம் ஆகிய இவை ஐந்து மலர்களுமே காமன் அம்புகள் ஆகும், இவை
செயும் குணம் - இவை (உயிர்களுக்கு) ஊட்டும் பண்புகள், முளரி மனதில்
ஆசையை எழுப்பும் - தாமரை உள்ளத்திலே காமத்தை உண்டாக்கும்,
வினவில் ஒண் சூதமலர் மெய்ப்பசலை உண்டாக்கும் - வினவுமிடத்துச்
சிறப்புடைய மாமலர் உடலிலே பசலை நிறத்தைக் கொடுக்கும், அசோகம்
மிகத் துயர்செயும் - அசோக மலர் மிகவும் |
|
|
|