அஞ்சுகணை
மாரவேட் கென்பர்; எளியோர்க்கெலாம்
அமுதமே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) எளியோர்க்கு
எலாம் அமுதமே - ஆற்றல் அற்றவர்கள்
எல்லாருக்கும் அமுதம் போன்றவனே!, அருமை ...... தேவனே!, அஞ்சுகணை
மார வேட்கு - ஐந்து அம்புகளையுடைய காமனுக்கு, வெம் சிலை செழுங்
கழை - கொடிய வில் வளம் பொருந்திய கரும்பாகும், நாரி கருவண்டு இனம்
- அம்பு கரிய வண்டின் கூட்டம் (ஆகும்). மேல் விடும் கணைகள் அலர்
ஆம் - (உயிர்களின்) மேல் எய்யும் அம்புகள் மலர்களாகும், தேர் வீசிடும்
தென்றல் - தேர் உலவும் தென்றற் காற்று (ஆகும்), பரிகள் பைங்கிள்ளையே
- குதிரைகள் பச்சைக் கிளிகளே (ஆகும்). வேழம் கெடாத இருள் ஆம் -
யானை அழியாத இருளாகும். பெருஞ்சேனை வஞ்சியர் - மிகுபடை பெண்கள்
(ஆவர்), உடைவாள் கைதை - உடைவாள் தாழை மடல் (ஆகும்), முரசம்
நெடிய வண்மைபெறு கடல் ஆம் - போர் முரசு நீண்ட கொடைத்தன்மை
பொருந்திய கடலாகும், பதாகை மகரம் - கொடி மகர மீன் ஆகும், காகளம்
வரு கோகிலம் - சின்னம் (வேனிலில்) வரும் குயிலாகும், பெரும்
போர்க்களம் மனதே - பெரிய போர்க்களம் (உயிர்களின்) உள்ளமே ஆகும்,
பாடல் சஞ்சரிக இசை - பாட்டுக்கள் வண்டின் இசை ஆகும், கவிகை
குமுதம் நேயன் - குடை சந்திரன் (ஆவான்); மனைவி சார் இரதியே ஆம் -
காதலி (அழகு) பொருந்திய இரதியே ஆவாள், மகுடம் தறுகண் மடமாதர்
இளமுலை ஆம் - அஞ்சாமை பொருந்திய இளம் பெண்களின் இளமுலைகள்
முடி ஆகும், தவறாது இருக்கும் இடம் அல்குல் ஆம் - எப்போதும் விடாமல்
வீற்றிருக்கும் இடம் (பெண்களின்) அல்குல் ஆகும், என்பர் - என்று அறிஞர்
கூறுவர்.
(வி-ரை.) சஞ்சரிகம்
- வண்டு. குமுதம் - அல்லி. அல்லியின் காதலன்
சந்திரன் என்பர். சந்திரனைக் கண்டால் அல்லி மலரும் |
|
|
|