|
அவமதி
தவிர்த் தென்னை ஆட்கொண்ட வள்ளலே!
அண்ணலே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அவமதி தவிர்த்து என்னை ஆட்கொண்ட
வள்ளலே - தீய
அறிவை நீக்கி என்னை அடிமை கொண்ட வள்ளலே!, அண்ணலே -
தலைவனே!, அருமை ..... தேவனே!, சுவைசேர் கரும்பை - சுவை பொருந்திய
கரும்பையும், வெண் பாலை - வெண்மையான பாலையும், பருத்தியை -
பருத்தியையும், சொல்லும் நல் நெல்லை - சொல்லப்படுகின்ற நல்ல
நெல்லையும், எள்ளை - எள்ளையும், தூய தெங்கின் கனியை - தூய்மை
பொருந்திய தென்னம் பழத்தையும், எண்ணாத துட்டரை - மதிக்காத
தீயவர்களையும், தொண்டரை - அடிமையாளரையும், தொழு தொழும்பை -
குற்றேவேல் செய்வோரையும், நவைதீருமாறு - குற்றம் நீங்கும்படி, கண்டித்தே
- கண்டனம் செய்தே, பயன் கொள்வர் - அவர்களால் ஆன பயனைப்
பெறுவார்கள், நல் தமிழ் வாணரை - நல்ல தமிழைக் கற்றுச் சிறந்த
புலவரையும், நலம் மிக்க செழுமலரை - நன்மை மிகுந்த செழித்த பூவையும்,
ஓவியம் எனத் தக்க நயம் உள்ள நாரியர் தமை - ஓவியத்தில் எழுதிய
பாவை என்று சொல்லத் தகுந்த அழகுள்ள பெண்களையும், புவி மீதில்
உபகார நெஞ்சரை - பூமியின் மீதில் உதவி செய்ய வேண்டுமென்று மனம்
படைத்தோரையும், சிறுவரை - சிறுவரையும், போர் வீரரை - போர்
வீரர்களையும், தூயரை - தூய்மை பொருந்திய பெரியோர்களையும், போதவும்
பரிவோடு மிகுபயன் புகழ் பெறக் கொள்வர் - மிகுதியான அன்போடு மிகுந்த
பயன்களை அவர்களுக்குப் புகழ் உண்டாகும்படி கொள்வார்கள்.
(வி-ரை.) தொழும்பர் - குற்றேவல்
செய்வோர். நவை - குற்றம். |
|
|
|