|
(வி-ரை.)
‘அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை,
அஃதும் பிறன்பழிப்ப
தில்லாயின் நன்று' என்னும் வள்ளுவர் வாய்மொழியை ஒப்புநோக்குக.
|
96.
புராணம்
தலைமைசேர் பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்
சாரும்வா மனம், மச் சமே,
சைவம், பெ ருங்கூர்மம், வருவரா கம், கந்த
சரிதமே, பிரமாண் டமும்,
தலைமைசேர் இப்பத்தும் உயர்சிவ புராணம்ஆம்;
நெடியமால் கதை;வை ணவம்
நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம்,
நீடிய புராணம் நான்காம்;
கலைவளர்சொல் பதுமமொடு, கிரமகை வர்த்தமே,
கமலா லயன்கா தைஆம்;
கதிரவன் காதையே சூரிய புராணமாம்;
கனல் காதை ஆக்கி னேயம்;
அலைகொண்ட நதியும்வெண் மதியும்அறு கும்புனையும்
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அலைகொண்ட
நதியும் வெண்மதியும் அறுகும் புனையும்
அத்தனே - திரையெறியும் கங்கையாற்றையும் வெண்திங்களையும்
அறுகையும் மிலைந்த தலைவனே!, அருமை ........ தேவனே!, தலைமைசேர்
பௌடிகம், இலிங்கம், மார்க்கண்டம், எழில்சாரும் வாமனம், மச்சம், சைவம்,
பெருங்கூர்மம், வருவராகம், கந்தசரிதம், பிரமாண்டமும் - நிலைமைசேர்
இப்பத்தும் உயர் சிவபுராணம் ஆம் - நிலையான இவை பத்தும் உயர்ந்த
சிவபுராணங்கள் ஆகும், நெடிய மால் கதை - நெடியவனான திருமாலின்
கதைகள், வைணவம், நீதிசேர் காருடம், நாரதம், பாகவதம், நீடிய |