பக்கம் எண் :

149

ஏமுறும் இராவணனை வென்றவன் இராகவன்;
     இரவிகுலம் வேர றுத்தோன்
  ஏர்பர சிராமன்; வரு கண்ணனொடு பலராமன்
     இப்புவி பயந்த விர்த்தோர்
ஆமினிய கற்கிஇனி மேல்வருவ திவைபத்தும்
     அரிவடிவம்; அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
அருமை .......... தேவனே!, முன் சோமுக அசுரனை வதைத்து
அமரர் துயர் கெடச் சுருதி தந்தது மச்சம் ஆம் - முற்காலத்தில் சோமுகன்
என்னும் அசுரனைக் கொன்று வானவர் துன்பங் கெடும்படி செய்து
மறைகளைக் கொண்டுவந்தது மீன் தோற்றம் ஆகும், சுரர் தமக்கு அமுது
ஈந்தது ஆமைஆம் - வானவர்க்கு அமுதளிக்கக் கொண்ட தோற்றம் ஆமை
ஆகும், மாநிலம் பாய்போற் சுருட்டி எடுத்தே போம் இரணியாக்கதனை உயிர்
உண்டது ஏனம் ஆம் - பெரிய நிலத்தைப் பாயைப் போற் சுருட்டி எடுத்துச்
செல்லும் இரணியாக்கன் உயிரைப் பருகியது பன்றி ஆகும், பொல்லாத
கனகன் உயிரைப் போக்கியது நரசிங்கம் - கொடிய இரணியன் உயிரை
ஒழித்தது நரசிங்கம் ஆகும், உலகு அளந்து ஓங்கியது புனித வாமன மூர்த்தி
ஆம் - உலகத்தை (மாவலியிடம் தானம் பெற்று) அளக்க நெடிய
உருக்கொண்டது வாமன வடிவம் ஆகும், இரவிகுலம் வேர் அறுத்தோன் ஏர்
பரசு இராமன் - கதிரவன் மரபை அடியுடன் ஒழித்தவன் அழகிய கோடரி
ஏந்திய பரசுராமன் ஆவான், ஏம் உறும் இராவணனை வென்றவன் இராகவன்
- செருக்கு அடைந்திருந்த இராவணனை வெற்றிகொண்டவன் இரகுமரபிற்
பிறந்த இராமன் ஆவான், இப் புவி பயம் தவிர்த்தோர் வரு பலராமனொடு
கண்ணன் - இவ்வுலகின் அச்சத்தை நீக்கப் பிறந்துவந்தோர் பலராமனும்
கண்ணனும் ஆவர், இனிமேல் வருவது இனிய கற்கி ஆம் - இனிமேல்
தோன்றக்கூடியது