பக்கம் எண் :

151

போன், காமதகனன் - மாரனை எரித்தோன், மறலியை வென்ற பெம்மான் -
காலனை உதைத்த பெரியோன் புரம் தகித்தோன் - முப்புரத்தை எரித்தவன்,
மறம் மலி சலந்தரனை மாய்த்தவன் - வீரம் நிறைந்த சலந்தரனைக்
கொன்றவன், பிரமன் முடி வௌவினோன் - பிரமன் தலையைக்
கிள்ளினோன், வீரேசுரன் - (வீரபத்திரன்), மருவும் நரசிங்கத்தை மாய்த்த
அரன் (சரபேசுரன்), உமை பாகன் - உமை பங்கன் (அர்த்தநாரீசன்)
வனசரன் - வேடன், கங்காளன் - என்பு அணிந்தோன், விறல் மேவு
சண்டேச ரட்சகன் - வலிமை பொருந்திய சண்டேசருக்கு அருளியவன்,
கடுமாந்தி - நஞ்சுண்டவன், மிக்க சக்கரம் உதவினோன் - (திருமாலுக்கு)
உயர்ந்த சக்கரத்தைக் கொடுத்தவன், விநாயகற்கு அருள்செய்தோன்- மூத்த
பிள்ளையாருக்கு அருளியவன், குகன் உமையுடன் கூடி - முருகன் உமை
ஆகிய இருவருடன் கூடியவன் (சோமாஸ்கந்தமூர்த்தி) மிளிர் ஏக பாதன் -
விளங்கும் ஒற்றைத் திருவடியான், சுகன் - இன்ப வடிவமானவன், அறிவு
அரிய தட்சிணாமூர்த்தியொடு - அறிய இயலாத தக்கிணா மூர்த்தியுடன்,
இலிங்கம் ஆம் - இலிங்கம் ஆகிய ஐயனே - தலைவனே!, அருமை ........
தேவனே!,


     (வி-ரை.)
சிவபெருமான் கொண்டருளிய மூர்த்தி (வடிவம்)
இருபத்தைந்தாமாறு எண்ணிக் காண்க.

          100. கவி வணக்கம்

மலரிதழி பைங்குவளை மென்முல்லை மல்லிகை
     மருக்கொழுந் துயர்கூ விளம்
  மற்றும்உள வாசமலர் பத்திரம் சிலர்சூட
     மணிமுடி தனிற்பொ றுத்தே
சிலரெருக் கொடுவனத் துட்பூளை பச்சறுகு
     செம்முள்ளி மலர்சூ டவே
  சித்தம்வைத் தவையுமங் கீகரித் திடுமகா
     தேவதே வா!தெ ரிந்தே