பக்கம் எண் :

18

   10. ஒன்று இல்லாமற் பயன்படாதவை

கோவில் இல் லாதவூர், நாசியில் லாமுகம்,
     கொழுநன் இல் லாத மடவார்,
  குணமதில் லாவித்தை, மணமதில் லாதமலர்,
     குஞ்சரம் இலாத சேனை,
காவல்இல் லாதபயிர், பாலர்இல் லாதமனை,
     கதிர்மதி யிலாத வானம்,
  கவிஞர்இல் லாதசபை, சுதிலயை இலாதபண்,
     காவலர் இலாத தேசம்,
ஈவதில் லாததனம் நியமம்இல் லாதசெபம்,
     இசை லவணம் இல்லா தவூண்,
  இச்சையில் லாதபெண் போகநலம், இவை தம்மின்
     ஏதுபலன் உண்டு? கண்டாய்!
ஆவியனை யாட்கிடம் தந்தவா! கற்பதரு
     ஆகும்எம தருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

      (இ-ள்.) ஆவி அனையாட்கு இடம் தந்தவர் - உயிரனைய
உமையம்மைக்கு மெய்யில் இடப்பங்கை அருளியவனே!, கற்ப தரு ஆகும்
- கற்ப தரு என உலகிற்குப் பயன்படுகிற எமது ....... தேவனே!. கோவில்
இல்லாதவூர் - திருக்கோயில் இல்லாத ஊரும், நாசி இல்லா முகம் - மூக்கு
இல்லாத முகமும், கொழுநன் இல்லாத மடவார் - கணவன் இல்லாத
பெண்களும், குணமது இல்லா வித்தை - நற்பண்பையூட்டத கல்வியும்,
மணமது இல்லாத மலர் - நறுமணம் இல்லாத பூவும், குஞ்சரம் இல்லாத
சேனை - யானை இல்லாத படையும், காவல் இல்லாத பயிர் -
வேலியில்லாத பயிரும், பாலர் இல்லாத மனை - மழலைச் சிறுவர் இல்லாத
இல்லமும், கதிர்மதி இல்லாத வானம் - ஞாயிறுந் திங்களும் உலவாத
வானமும், கவிஞர் இல்லாத சபை -