சம்மதித்து
அவளோடு இணங்கி வாழ்பவன் ஒரு பதர் - தன் மனையாள்
அயலானிடத்திற்போக மனம் ஒப்பி, அவளுடன் கூடிவாழ்வான் ஒரு பதர்,
தன்னை வேறொருவர் மெச்சாது தானே மெச்சி வீண் பேசுவான் ஒரு பதர்
- தன்னை மற்றவர் புகழாமல், தானே புகழ்ந்துகொண்டு
வெற்றுரையாடுவான் ஒரு பதர், வேசையர்கள் ஆசை கொண்டு
உள்ளளவும் மனையாளை விட்டுவிடுவான் ஒரு பதர் - பரத்தையரிடங்
காமுற்றுக்காலமெல்லாம் இல்லாளைப் பிரிந்திருப்பவன் ஒரு பதர்.
(க-து.) இங்குக்
கூறப்பட்டவர்கள் மக்களுக்கு இழிவையுண்டாக்கத்
தக்கவர்கள்.
13.
செய்ய வேண்டும்
வாலிபந் தனில்வித்தை கற்க வேண்டும்;கற்ற
வழியிலே நிற்க வேண்டும்;
வளைகடல் திரிந்து பொருள் தேடவேண்டும்;தேடி
வளரறஞ் செய்ய வேண்டும்;
சீலம்உடை யோர்களைச் சேரவேண் டும்;பிரிதல்
செய்யா திருக்க வேண்டும்
செந்தமிழ்ப் பாடல்பல கொள்ளவேண் டும்;கொண்டு
தியாகம் கொடுக்க வேண்டும்;
ஞாலமிசை பலதருமம் நாட்டவேண் டும்;நாட்டி
நன்றாய் நடத்த வேண்டும்;
நம்பன் இணை யடிபூசை பண்ணவேண் டும்;பண்ணி
னாலும்மிகு பத்தி வேண்டும்
ஆலமமர் கண்டனே! பூதியணி முண்டனே!
அனக! எமதருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
|
|
|
|