வழக்கு
அழிவு புகலாத நிலைகொள் பேரும் - நிலையற்ற செல்வத்தைக்
கோடிக்கணக்காக ஒருவர் கொடுத்தாலும் அழிவழக்குக் கூறாத
நிலையுடையவரும், புவிமீது தலைபோகும் எனினும் கனவிலும் பொய்ம்மை
உரையாத பேரும் - உலகத்திலே தலைபோகும் என்றாலும் கனவிலேயும்
பொய் புகலாதவரும், இங்கு இவரெலாம் ஐய சற்புருடர் என்று உலகர்
அகம் மகிழ்வர் - இவ் வுலகில் இத்தகையோர்கள் யாவரையும் அழகாகிய
நன்மக்கள் என்று உலகமாந்தர் மனம் களிப்பார்கள்.
(வி-ரை.) செல்வம்
நிலையற்றது. எனவே, அது, ‘பொய்யொன்று நிதி'
எனப்பட்டது. ‘வழக்கழிவு' என்பதை ‘அழிவழக்கு' என மாற்றுக;
‘அடாவழக்கு' என்றும் கூறுவர். ஐ - அழகு. ஐய - ஐயனே! என
அறப்பளீசுர தேவனுக்கு ஆக்கினும் அமையும்.
(க-து.) செய்ந்நன்றி
மறவாமை முதலானவை நன்மக்களின் பண்புகள்.
17. நல்லோர்
- 2
அடைக்கலம்
எனத்தேடி வருவோர் தமைக்காக்கும்
அவனே மகாபுரு டனாம்;
அஞ்சாமல் எதுவரினும் எதுபோ கினும்சித்தம்
அசைவிலன் மகாதீ ரனாம்;
தொடுத்தொன்று சொன்னசொல் தப்பாது செய்கின்ற
தோன்றலே மகரா சனாம்;
தூறிக் கலைக்கின்ற பேர்வார்த்தை கேளாத
துரையே மகாமே ருவாம்!
அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த் திரட்சிக்கும்
அவனே மகாதியா கியாம்;
அவரவர் தராதரம் அறிந்துமரி யாதைசெயும்
அவனே மகாஉசி தன்ஆம்;
|
|
|
|
|