அடர்க்கின்ற
முத்தலைச் சூலனே! லோலனே!
அமலனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே! |
(இ-ள்.)
அடர்க்கின்ற முத்தலைச் சூலனே - (பகைவரைக்)
கொல்லுகின்ற முத்தலைச் சூலம் ஏந்தியவனே!, லோலனே - திருவிளையாடல்
புரிகின்றவனே!, அமலனே - குற்றம் அற்றவனே!, அருமை .......... தேவனே!,
அடைக்கலம் எனத் தேடிவருவோர் தமைக் காக்கும் அவனே மகாபுருடன்
ஆம் - அடைக்கலம் என்று தேடிவருவோர்களைக் காப்பாற்றுவோன்
மக்களிற் சிறந்தவன், அஞ்சாமல் எதுவரினும் எதுபோகினும் சித்தம்
அசைவு இலன் மகாதீரன் ஆம் - எது வந்தாலும் எதுபோனாலும் அச்சம்
இன்றி உள்ள உறுதியுடன் இருப்பவன் பெருவீரன், என்று தொடுத்துச்
சொன்ன சொல் தப்பாது செய்கின்ற தோன்றலே மகராசன் ஆம் -
ஒன்றைப்பற்றிக் கூறிய சொல்லை நழுவவிடாமல் செய்கின்ற தலைவனே
பேரரசன், தூறிக் கலைக்கின்ற பேர் வார்த்தை கேளாத துரையே
மகாமேருஆம் - வீண்பழி தூற்றி மனத்தைக் கலைப்பவரின் சொல்லை
நம்பாத செல்வனே மாமேரு மலை, அடுக்கின்ற பேர்க்குவரும் இடர்தீர்த்து
இரட்சிக்கும் அவனே மகா தியாகி ஆம் - தன்னைச் சார்ந்தோர்க்கு வருந்
துன்பத்தை நீக்கிக் காப்பவனே பெரிய வள்ளல், அவரவர் தராதரம்
அறிந்து மரியாதை செயும் அவனே மகா உசிதன்ஆம் -
ஒவ்வொருவருடைய தகுதியையும் பார்த்து மதிப்புக் கொடுக்கின்றவனே
சிறந்த தகவாளன்.
(அ-ள்.)
தராதரம் (வட) - ஏற்றத்தாழ்வு (தகுதி), உசிதம்
- தகுதி.
லோலம் (வட) - திருவிளையாட்டு. உலகைப் படைத்துக் காத்து அழிப்பதே
திருவிளையாடல் என்பர் அறிஞர்.
(க-து.) அடைக்கலங்
காத்தல் முதலானவை சிறந்த பண்புகள்.
|