பக்கம் எண் :

30

                18. இல்லை

காமிக்கு முறையில்லை; வேசைக்கு நாண்இல்லை;
     கயவர்க்கு மேன்மை யில்லை;
  கன்னம்இடு கள்வருக் கிருளில்லை; விபசார
     கன்னியர்க் காணை யில்லை;
தாமெனும் மயக்கறுத் தோங்குபெரி யோர்க்குவரு
     சாதிகுலம்என்ப தில்லை;
  தாட்சணியம் உடையபேர்க் கிகலில்லை; எங்குமொரு
     சார்பிலார்க் கிடம தில்லை;
பூமிக்குள் ஈயாத லோபர்க்கு வளமான
     புகழென்ப தொன்று மில்லை;
  புலையர்க்கு நிசமில்லை; கைப்பொருள் இலாததோர்
     புருடருக் கொன்றும் இல்லை;
யாமினி தனக்கு நிகர் கந்தரத் திறைவனே
     அன்புடைய அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

 
     (இ-ள்.)
யாமினி தனக்குநிகர் கந்தரத்து இறைவனே - இருளுக்கு
ஒப்பான கழுத்தினையுடைய முதல்வனே!, அன்பு உடைய - அன்புள்ள,
அருமை.................தேவனே!, காமிக்கு முறை இல்லை - காம மயக்கம்
உடையவர்க்கு முறை தோன்றாது. வேசைக்கு நாண் இல்லை - பரத்தைக்கு
வெட்கம் இராது, கயவர்க்கு மேன்மை இல்லை - தாழ்ந்தவர்க்கு உயர்வு
வராது, கன்னம் இடு கள்வருக்கு இருள் இல்லை - கன்னம் வைக்கும்
திருடருக்கு இருளில் அச்சம் தோன்றாது, தாம் எனும் மயக்கு அறுத்து
ஓங்கு பெரியோருக்கு வரு சாதி குலம் என்பது இல்லை - நாம் எனும்
மயக்கத்தை நீக்கி மேன்மையுற்ற சான்றோர்களுக்குச் சாதியும் குலமும்
தேவையில்லை, தாட்சணியம் உடையபேர்க்கு இகல் இல்லை - கண்ணோட்ட