20.
திருமகள் இருப்பிடம்
நற்பரி
முகத்திலே, மன்னவர் இடத்திலே,
நாகரிகர் மாமனை யிலே,
நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,
நறைகொண்ட பைந்துள விலே,
கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,
கல்யாண வாயில் தனிலே,
கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,
கதிபெறு விளக்க தனிலே,
பொற்புடைய சங்கிலே, மிக்கோர்கள் வாக்கிலே
பொய்யாத பேர்பா லிலே,
பூந்தடந் தன்னிலே, பாற்குடத் திடையிலே
போதகத் தின்சிர சிலே
அற்பெருங் கோதைமலர் மங்கைவாழ் இடமென்பர்
அண்ணல்எம தருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!
|
(இ-ள்.) அண்ணல் - தலைவனே!, எமது...........தேவனே!,
நல் பரி
முகத்தில் - அழகிய குதிரையின் முகத்திலும், மன்னவர் இடத்தில் -
அரசரின் இடத்திலும், நாகரிகர் மாமனையில் - நாகரிகம் அறிந்தவர்களின்
வீட்டிலும், நளின மலர் தன்னில் - தாமரை மலரிலும், கூவிளந் தருவில் -
வில்வ மரத்திலும், நறைகொண்ட பைந்துளவில் - மணமுடைய பசிய
திருத்துழாயிலும், கற்புடையர் வடிவில் - கற்புடைய மங்கையரின்
வடிவத்திலும், கடலில் - கடலிலும், கொடியில் - துகிற்கொடியிலும்,
கல்யாணவாயில் தனில் - திருமண வீட்டின் வாயிலிலும், கடிநகர் இடத்தில்
- காவலுடைய நகரத்திலும், நல்செந்நெல் விளைவில் - நல்ல செந்நெல்
விளைவிலும், கதிபெறு விளக்கதனில் - ஒளிவீசும் விளக்கிலும், பொற்பு
உடைய சங்கில் - அழகுறும்
|
|
|
|