பக்கம் எண் :

41

புந்திமகிழ் வாய்இரவி வருதல்கண் டகமகிழ்வ
     பொங்குதா மரைமலர் களாம்!
  போதவும் புயல்கண்டு கண்களித் தேநடம்
     புரிவது மயூர இனமாம்!
சிந்தைமகிழ் வாய்உதவு தாதாவி னைக்கண்டு
     சீர்பெறுவ திரவலர் குழாம்
  திகழ்நீதி மன்னரைக் கண்டுகளி கூர்வதிச்
     செகம்எலாம் என்பர் கண்டாய்!
அந்தியம் வான் அனைய செஞ்சடா டவியனே!
     அமலனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!

     (இ-ள்.)
அம் அந்தி வான் அனைய செம் சடாடவியனே - அழகிய
அந்தி வானம்போலச் சிவந்த சடைக்கற்றையுடையவனே!, அமலனே -
குற்றமற்றவனே!, அருமை ......... தேவனே!, தந்தை தாய் மலர்முகம் கண்டு
நின்று ஆலிப்பது அவர் தந்த சந்ததியது ஆம் - பெற்றோரின் மலர்ந்த
முகத்தைக் கண்டு பூரிப்பது அவர்கள் பெற்ற சந்ததி ஆகும், சந்திரோதயம்
கண்டு பூரிப்பது உயர்வாவி தங்கு பைங்குமுத மலர் ஆம் - திங்களின்
வருகைநோக்கி மலர்வது உயர்ந்த பொய்கையிலே அமைந்த புதிய
அல்லிமலர் ஆகும், புந்தி மகிழ்வாய் இரவி வருதல் கண்டு அகம் மகிழ்வ
பொங்கு தாமரை மலர்கள் ஆம் - மனம் மகிழ்வாக ஞாயிறு எழுதல்
நோக்கி மனம் களிப்பன மிகுதியான தாமரைப்பூக்கள் ஆகும், போதவும்
புயல்கண்டு கண்களித்தே நடம் புரிவது மயூர இனம் ஆம் - முகிலை
நன்றாகப் பார்த்துக் கண்களித்து நடனம்புரிவது மயிலின் கூட்டம் ஆகும்,
சிந்தை மகிழ்வாய் உதவு தாதா வினைக் கண்டு சீர் பெறுவது இரவலர்
குழாம் - மனக் களிப்புடன் கொடுக்கும் கொடையாளியைக் கண்டு
சிறப்புறுவது இரவலர் கூட்டம், திகழ் நீதி மன்னரைக் கண்டு