பக்கம் எண் :

47

மொழி தவறாது நடக்கின்றவன் எவனாயினும் அவனே மகன் ஆவான்.

     (வி-ரை.)
நாரம் - நீர்; இங்குக் கங்கையை உணர்த்துகிறது. நன்மை
தீமை, தனது : ஒருமை பன்மை மயக்கம். (நன்மை தீமை தன்னுடையவை
என வருதல் வேண்டும்.) உத்தி : யுக்தி என்னும் வடமொழிச் சிதைவு.
ஒன்னார் : மனம் பொருந்தார்.


     (க-து.)
இயற்கையாக உள்ளவரே அன்றி இங்குக்
கூறப்பட்டவர்களும் இம் முறையினர் ஆவர். அன்றி, இவ்வாறு
பயன்படாதவர்கள் இம்முறைக்குத் தகாதவர் எனினும் பொருந்தும்.

        29. ஒழுகும் முறை

மாதா பிதாவினுக் குள்ளன் புடன்கனிவு
     மாறாத நல்லொ ழுக்கம்;
  மருவுகுரு ஆனவர்க் கினியஉப சாரம்உள
     வார்த்தைவழி பாட டக்கம்;
காதார் கருங்கண்மனை யாள்தனக் கோசயன
     காலத்தில் நயபா டணம்;
  கற்றபெரி யோர்முதியர் வரும்ஆ துலர்க்கெலாம்
     கருணைசேர் அருள்வி தானம்;
நீதிபெறும் மன்னவ ரிடத்ததிக பயவினயம்;
     நெறியுடைய பேர்க்கிங்கிதம்;
  நேயம்உள தமர்தமக் ககமகிழ் வுடன்பரிவு
     நேரலர் இடத்தில் வைரம்
ஆதிமனு நூல்சொலும் வழக்கம்இது ஆகும்எம
     தையனே! அருமை மதவேள்
  அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
     அறப்பளீ சுரதே வனே!


     (இ-ள்.)
எமது ஐயனே - எம் தலைவனே!, அருமை ...........
தேவனே!, மாதா பிதாவினுக்கு உள் அன்புடன் கனிவு மாறாத
நல்லொழுக்கம் - பெற்றோர்களிடம் உள்ளம்